செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வரலாற்றை அழித்து, தமிழ் இலக்கியத்தை கைபற்றி, சாதியத்தை திணித்து, தன் ஆதிக்கத்தை நிறுவியது ஆரியம்


Devi Somasundaram:பெரியார் என்றோரு பகுத்தறிவு சுடர் தந்த புத்தி, அம்பேத்கர் ,மார்க்ஸ் போன்ற அறிஞர் தந்த அறிவு , பத்திரிக்கை, மீடியா, போன்ற வெகு ஜன தொடர்பு , ஷோஷியல் மீடியா போன்ற மக்களுடன் உடனடி தொடர்பு, ஐ நா சபை, மனித உரிமை அமைப்பு போன்ற அன்னிய கண்காணிப்பு , படித்து அறிந்த மக்கள் என்று இத்தனை விஸ்தாரமான அறிவு கிடைத்த இந்த நாட்களில் ஆரியம் தன் அதிகார ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்ள முடிகிறதென்றால்.
சங்க காலம் தொட்டு, அப்பாவிகளாய் இந்தமண்ணி வாழ்ந்த தமிழ் குடி மக்களை, இந்த மண்ணில் நுழைந்து , நம் பண்பாட்டை சிதைத்து , மக்களை பிரித்து , மன்னர்களை தன் கை வச படுத்தி .வரலாற்றை அழித்து, மாற்றி ,தமிழ் இலக்கியத்தை கைபற்றி, சாதியத்தை திணித்து, தன் ஆதிக்கத்தை நிறுவியது ஆரியத்துக்கு எளிதான செயலாக தான் இருந்திருக்கும்...
வரலாறுகள் தன்னை எப்படி கடத்தி வந்து இருக்கிறது என்று யோசித்தால் மலைப்பாக தான் இருக்கு ...

கருத்துகள் இல்லை: