புதன், 23 ஆகஸ்ட், 2017

4 ஆயிரம் மாணவர்களுக்காக 4 லட்சம் மாணவர்கள் பலி கொடுக்கப் படுகிறார்களா ?

Thirumurugan Gandhi : தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 24 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.
குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 1000க்கு 21. இந்தியாவில் 1000க்கு 40.
பிரசவத்தில் இறக்கும் தாய்கள் விகிதம் தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கு 79. இந்தியாவில் 167.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் தமிழ்நாட்டில் 18%. இந்தியாவில் 28%.
1 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் 149 மருத்துவர்கள். இந்தியாவில் 36.
வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக அதிகமாக வருகை புரிவது தமிழ்நாட்டிற்குத்தான்.
மருத்துவ உயர்கல்வியில் பல்வேறு ஆய்வுப் படிப்புகளுக்கான இடங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
இவை அனைத்தையும் தமிழ்நாடு தனது சொந்த முயற்சியில் உருவாக்கிக் காட்டியது. தனது மாநிலத்தின் கல்வி வழியே படித்த மாணவர்கள் உருவாக்கியது. CBSE பாடத்திட்டத்தில் படித்து வந்தவர்கள் எவரும் இதில் எதையும் கிழித்து விடவில்லை.
தமிழ்நாட்டில் மாநில அரசின் பாடத் திட்டப்படி 4.2 லட்சம் மாணவர்கள் அறிவியல் பாடத் திட்டத்தின் கீழ் படித்துள்ளனர். ஆனால் CBSE மாணவர்கள் வெறும் 4,675 பேர்.
மேல்தட்டு உயர்சாதி சமூகத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாணவர்களை மருத்துவப் படிப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்திருக்கிறது இந்திய பாஜக அரசு.
ஒற்றைக் கல்வி முறை திணிப்பினையும், நீட் அநீதியினையும் எதிர்த்து வீதிகளை நிரப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது

கருத்துகள் இல்லை: