ஞாயிறு, 31 ஜூலை, 2016

மின்சாரம் இன்றி நாற்று நாடும் இயந்திரம் கண்டுபிடித்த மாணவி சரண்யா

மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவி. அசத்தும் 8-ம் வகுப்பு மாணவி.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா எரிசக்தி இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை வடிவமைத்துள்ளார். இந்த கருவி ஏழ்மையான விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றாக உழவு செய்யப்பட்டு நடுவதற்கு ஏற்ற வகையில் உள்ள வயலில் சரியான இடைவெளியில் இந்த கருவியை இழுத்து சென்றால் நாற்றுகளை யாருடைய உதவியும் இன்றி நடமுடியும். இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் குறைந்த செலவில் நாற்றுகளை நட்டு விட முடியும்.
சபாஷ் சகோதரி....  முகநூல் பதிவு : flashnews 24+7 tamil

கருத்துகள் இல்லை: