நவம்பர் 21-ம் தேதி இவருக்கு 75 வயதாகிவிடும் என்று கூறிய ஆனந்திபென், அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பாஜகவுக்கு புதிய முகம் தேவை என்று கூறியுள்ளார்.
“பாஜக-வில் சிலகாலமாக இருந்து வரும் பழக்கத்தின் அடிப்படையில் 75 வயதாகிவிட்டால் அவர்கள் தாமாகவே பதவியிலிருந்து விலக வேண்டும் எனவே நான் விலகுகிறேன்” என்று கூறும் ஆனந்திபென் குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற அந்தஸ்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது காலக்கட்டத்தில்தான் ஊராட்சி தேர்தல்களில் பாஜக சமீபமாக சில தோல்விகளைச் சந்தித்தது. காங்கிரஸ் ஊராட்சித் தேர்தல்களில் பலம் பெற்றது.
மேலும் படேல் சமூகத்தினரின் எழுச்சி இவருக்கு பெரிய சவாலாக அமைந்ததோடு, உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
சமீபத்தில் உனாவில் இறந்த பசுமாட்டுத் தோலை உரித்ததற்காக தலித்துகள் சிலரை ஒரு கும்பல் அடித்து உதைத்தது மாநிலம் தழுவிய தலித் எழுச்சிக்கு வித்திட்டதோடு, கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது. ://tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக