செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் : ஐயோ எனக்கு எல்லாமே அம்மாதான் என் மனைவி நாடகமாடுகிறார்... காப்பாத்துங்க....

அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை எதிர்த்து ராஜ்யசபாவில் பேசி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் எம்பி சசிகலா புஷ்பா. ஆனால் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகரோ, என் மனைவி அரசியலுக்காக நாடகமாடுகிறார்; எனக்கு எல்லாமே 'அம்மா' (ஜெ)தான் என கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். ராஜ்யசபாவிலும் டெல்லி செய்தியாளர்களிடம் ஜெயலலிதா தம்மை தாக்கியதாக; நாயைப் போல வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அதிரடியாக கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. ராஜ்யசபாவில் ஜெயலலிதா மீது சசிகலா புஷ்பா புகார் கூறிய அதே நேரத்தில் அவர் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு தமக்கான ஆதரவு வட்டத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் சசிகலா புஷ்பாவின் இந்த நடவடிக்கைகளை அவரது கணவர் லிங்கேஸ்வர திலகர் கடுமையாக எதிர்ப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read more at: /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: