ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஹரியானா: இரு தலித் பெண்களை நிர்வாணமாக்கி அடித்து உதித்த R S S .. பசு கடத்த முயற்சியாம்

பெண்கள் பசுவை கடத்த முயன்றதாகக் கூறி இரண்டு தலித் பெண் களை நிர்வாண மாக்கி அடித்து சித்திரவதை செய்யப்பட் டுள்ளனர். அரியானா (பரிதாபாத்) வில் பசு மற்றும் அதன் கன்று ஒன்றை கடத்த முயன்றதாகக் கூறி இரண்டு தலித் பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை அடித்துத் துன்புறுத்திய காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக அதில் என்ன எழுதப்பட்டுள்ளது தெரியுமா? இந்த இரண்டு தலித் பெண்களும் பசு மாட்டையும், அதன் கன்றையும் கடத்திச் செல்ல முயன்றனர். ஆகவே, இவர்களுக்கு இந்த தண்டனை என்று எழுதப்பட்டுள்ளது. பி.ஜே.பி. ஆட்சியில் தண்டனை வழங்கும் அதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ். எடுத்துக் கொண்டுள்ளதா?  விடுதலை.காம்

கருத்துகள் இல்லை: