ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

20க்கும் மேற்பட்ட சடலங்கள் மாதந்தோறும் இலங்கைக்கு வருகிறது

வெளிநாடுகளில் உயிரிழக்கும் 20க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் மாதந்தோறும் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தேசிய காப்புறுதி நிதியத்தின் தலைவர் சேனக அபேகுணசேகர தெரிவித்துள்ளார்.திடீர் விபத்துக்கள் மற்றும் இயற்கை காரணங்களினால் வெளிநாடுகளில் உயிரிழக்கும் 20க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.
வெளிநாடுகளில் பணியாற்றி உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக நான்கு லட்ச ரூபா செலவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
காப்புறுதித் தொகையில் சடலத்தை கொண்டு வருவதற்காக செலவிடப்படும் தொகையைத் தவிர்ந்த எஞ்சிய தொகை உறவினர்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதாந்தம் இலங்கையைச் சேர்ந்த பதினெட்டாயிரம் பேர் பல்வேறு நாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடாக வெளிநாடு செல்லும் அனைவரும் தேசிய காப்புறுதி நிதியத்தி

கருத்துகள் இல்லை: