வியாழன், 2 செப்டம்பர், 2010

இந்திய அரசின் அனைத்து உதவிகளும் வன்னி மக்களை நேரடியாக சென்றடையும்

இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் அனைத்து உதவிகளும் அந்த மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கு இந்தியா உத்தரவாதம் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், தமது அரசாங்கத்தினால் இலங்கையில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரடியாக ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்தியாவின் அனைத்து உதவிகளும் அந்த மக்களை நேரடியாகச் சென்றடையும்.
அதற்கான உத்தரவாதத்தை இந்திய அரசாங்கம் வழங்குகின்றது.

கருத்துகள் இல்லை: