
இந்தியாவின் வாதங்களை ஏற்றுக் கொண்ட ரோனி ஆபிரஹாம் மேலும் கூறுகையில், ''ஜாதவை தூக்கிலிடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை குல்புஷன் ஜாதவை தூக்கிலிடக்கூடாது '' என்று தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறு என்றும் ரோனி ஆபிரஹாம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
குல்புஷன் ஜாதவை தூதரகம் மூலம் தொடர்பு கொள்ள இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் குல்புஷன் ஜாதவை சந்திக்க, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் ராஜரீக உறவுகளுக்கான வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா குற்றம் சுமத்துகிறது;
ஆனால், தாங்கள் சட்டரீதியான நடைமுறைகளை சரியாக கடைபிடித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக