செவ்வாய், 16 மே, 2017

மத்திய அரசை எதிர்த்தால் ரெய்டு: விஜயதரணி"

மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்தால் ரெய்டு நடத்தப்படும் என காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதரணி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதரணி மே 16-ஆம் தேதி குழித்துறையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், “மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்தால் சிபிஐ, வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தப்பட்டு அச்சுறுத்தப்படுகிறது. அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் நடந்த சோதனை தற்போது காங்கிரஸ் பக்கம் திசை திரும்பியுள்ளது” என அவர் கூறினார்.  கலைஞர் வீட்டு மாடியில்  ரெய்டு பண்ணிக்கொண்டே  ஹாலில் அமர்ந்து அதிக சீட்டுக்களை பறித்து எடுத்த காங்கிரஸ் வரலாறுகள் உண்டே ? வருமானவரி பயம் காட்டி எம்ஜியாரை பிரித்த மோகன் குமாரமங்கலம் வரலாறுகளும் உண்டே ? விஜயதரணி அம்மையார் பதட்டப்படவேண்டாம் எல்லாம் உங்க ஆளுங்க காட்டிய வழிதான்!

மேலும் அவர், “பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பதன் மூலம் ரஜினிகாந்த் பாஜகவுக்கு செல்லவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. காங்கிரஸும் ரஜினியை அழைக்கிறது தான். அகில இந்திய அளவில் வழிநடத்த ரஜினியை நாங்கள் அழைக்கிறோம். ரஜினி தனிக்கட்சி தொடங்கினாலும் நாங்கள் அதை வரவேற்போம்” என அவர் கூறினார் மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: