வியாழன், 18 மே, 2017

சுப.உதயகுமாரன் : ரஜினி கறுப்பு பணம் வாங்கியது இல்லை என்று உறுதி மொழி கொடுப்பாரா?

திரு. ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்:
[1] தனது உண்மையான, முழுமையான சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும்.
[2] கடந்த ஐந்தாண்டுகளில் கட்டிய வருமானவரிக் கணக்கு விபரங்களை, தணிக்கை அறிக்கைகளை தமிழ் மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.
[3] இதுவரை தனது சம்பளத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட கருப்புப் பணமாகப் பெற்றதில்லை என்று எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
[4] எந்தெந்த ஜோதிடர்கள், பூசாரிகள், சாமியார்கள் இவருக்கு அறிவுரைக்கிறார்கள், அல்லது முடிவுகள் எடுக்க உதவுகிறார்கள் என்கிற முழு விபரத்தை அறியத்தர வேண்டும். [5] நதிநீர் இணைப்புக்கு நன்கொடை தருவதாக அறிவித்த ஒரு கோடி ரூபாயை யாரிடம் கொடுத்தார். அந்தப் பணம் எப்படி செலவு செய்யப்பட்டது என்கிற விபரத்தைத் தர வேண்டும்.
[6] தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் விதத்தில் பொதுமேடை ஒன்றை அமைத்து மக்களை சந்திக்க வேண்டும்.
>சுப. உதயகுமாரன், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.thetimestamil.com

கருத்துகள் இல்லை: