ஞாயிறு, 7 மே, 2017

ஆந்திராவில் ஓட்டுனர் இல்லாத கார் .. தமிழகத்தில் மாட்டுக்கார வேலன்? Google car

Image may contain: 1 person, standing and car
Stanley Rajan :
கூகுளின் ஓட்டுநர் இல்லா காரினை ஆந்திராவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர சந்திரபாபு நாயுடு விருப்பம், அமெரிக்காவில் கூகுள் அதிகாரிகளை சந்தித்தபின் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆக ஆந்திராவிற்கு ஆளில்லா கார் வரப்போகின்றது
தமிழகத்திற்கு என்ன வரப்போகின்றது தெரியுமா? 46 வருடங்களுக்கு முன்பு இரு சனியன்கள் நடித்து தொலைத்த "மாட்டுக்கார வேலன்" படம் மறுபடியும் ரீலிஸ் ஆகின்றதாம்< எதற்கு என்றால் மத்திய அரசினை அனுசரித்து செல்லவேண்டும் என பழனிச்சாமியே கூட்டத்தில் அறிவித்ததாக சொல்லபட்டது, அனுசரித்து என்பதை விட மகிழ்வித்தால் என்ன என முடிவு செய்துவிட்டார்கள்
"நாங்கள் மாட்டுகறிக்கு எதிரானவர்கள், பசு மாட்டை வணங்குபவர்கள், எங்கள் எம்ஜிஆரே அப்படித்தான் படங்களில் நடித்தார், நாங்கள் கூட உங்கள் கொள்கை, அல்ல அல்ல எம்ஜிஆரின் கொள்கைதான் பாஜக கொள்கை..." என சொல்லிகொண்டு டெல்லியினை சமாதனபடுத்தலாம்
அதனால்தான் இப்பொழுது "மாட்டுக்கார வேலன்" வருகின்றது, இனி விநாய சதுர்த்தி வேளையில் எம்ஜிஆர் யானைகளோடு நடித்த‌ "நல்ல நேரம்" படம் வெளிவரும்

ஆந்திராவும் சினிமா மோகத்தில் வீழ்ந்த மாநிலம்தான், ஆனால் ஆட்சியினை பறித்த சந்திரபாபு நாயுடு, சின்னாத்தா சிவபார்வதியினை எழும்பவிடமால் அடித்து ஆந்திராவினை நிமிர்த்திகொண்டிருக்கின்றார்
தமிழகமோ ராமசந்திரன் போனால் ஜெயா, ஜெயாவும் போனால் சின்னாத்தா என நாசமாய் போயிவிட்டது, சந்திரபபாபு போல ஒருவர் வரவேண்டிய நேரத்தில் வராமல் தொலைந்துவிட்டார், நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்
இனி ஆந்திரவில் நவீன கூகுள் கார் ஓடும், நாம் ஹூண்டாய், கியா , பெர்டானா கார் கம்பெனிகளையும் தமிழகத்திலிருந்து விரட்டிவிட்டு "மாட்டுக்கார வேலன், மந்திரி குமாரி" என பார்த்து தொலைவோம்
அவர்களுக்கு சந்திரபாபு கிடைத்திருக்கின்றார், நமக்கு பன்னீரும் பழனிச்சாமியும்தான் கிடைத்திருக்கின்றார்கள், நம் தலையெழுத்து அப்படி<

கருத்துகள் இல்லை: