சனி, 13 மே, 2017

பன்னீர்செல்வம் :எங்களால் ஆட்சி கலையாது! ஓஹோ அப்படீன்னா நிச்சயம் கலையும்?


எங்கள் அணியால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலையாது’ என ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
மே 12ஆம் தேதி சேலத்தில் நடந்த கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி எங்களால் கவிழும் சூழல் ஏற்படாது. நாங்கள் எதற்காக தனியாகப் பிரிந்து வந்தோமோ, அந்த நோக்கம் விரைவில் நிறைவேறும். எனவே, ஆட்சியைக் கலைப்பது எங்கள் நோக்கமல்ல. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் இருப்பவர்கள் தான்தோன்றித்தனமாகச் செயல்படுகின்றனர்” என்று அவர் கூறினார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: