செவ்வாய், 9 மே, 2017

தீபக் : அத்தை ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களும் எனது பெயரிலும் தீபா பெயரிலும்தான் உள்ளது

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தனியார் ஆங்கில 'டிவி' சேனலுக்கு தீபக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என் வசம் உள்ளது. அந்த உயிலில், அனைத்து சொத்துக்களும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கோடநாடு எஸ்டேட், ஐ தராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துக்கள் எனக்கு சொந்தம். இவ்வாறு தீபக் கூறியுள்ளார்.
அம்மாவுக்கு ஒட்டு போட்ட பொது மக்களுக்கு பட்டை நாமம். இது தான் "உங்களுக்காவே நான்" என்கிற பட்டை நாமம். காசு வாங்கி ஒட்டு போட்ட பன்னாடை மக்கள் இன்னும் அனுபவிக்க போகிறது. அம்மா ஊழல்வாதி இல்லை என்றால் தன்னுடைய சொத்துக்களை தமிழக அரசுக்கு கொடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை???? அம்மா என்கிற பெயரில் தமிழகத்தை ஏமாற்றிய ஜெயலலிதா ஒரு திருடி, ஊழல்வாதி என்று உச்ச நீதி மன்றமே சொல்லிவிட்டது. இனி மேல் திருந்தவேண்டியது பொது மக்களே. இனிமேல் கழக திருடர்களை நம்பாமல் அவர்களின் யோக்கிய தன்மைக்கு மதிப்பு கொடுத்து ஒட்டு போடுங்கள். காமராஜரையே தோற்கடித்த தமிழக மக்கள் திருந்துவார்களா என்ன?????தினமலர்

கருத்துகள் இல்லை: