வியாழன், 28 ஜூலை, 2011

2 கோடி பெறுமதியான நகைகள் மீட்பு; கல்கிசையில் தமிழ்ப் பெண் கைது,புதூர் வங்கியில் கொள்ளையிடப்பட்ட

மட்டக்களப்பு புதூர் அரச வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்ட 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளில் 12 கோடி ரூபா பெறுமதியானவை கல்கிசைப் பகுதியிலும் மட்டக்களப் பிலும் இரகசியப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. புதூர் அரச வங்கியொன் றில் அண்மையில் 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளும் 35 லட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டன.இந்த வங்கிக் கொள்ளை தொடர்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கைதான பெண் கல்கிசையிலும், தெஹிவளையிலும் இரு வீடுகளை வாடகைக்குப் பெற்றிருந்தார். அந்த இரு வீடுகளி லும் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. இதன் பின்னர் மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கோடி பெறுமதியான 10 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. வென்னப்புவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட இந்த வங்கிக் கொள்ளையை மேற்கொண்ட குழுவின் தலைவன் எனக் கருதப்படும் பிரதீபன் என்பவரிடம் பெறப்பட்ட தகவல்களை அடுத்தே மேற்படி பெண் கைது செய்யப்பட்டார் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பெண் கைது செய்யப்படுவதற்கு முன்னர் வங்கியின் அலுவலக உதவியாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் கொள்ளையில் நேரடியாக பங்கேற்றதாக கருதப்படும் பிரதீபன், கண்ணன் ஆகியோர் கைதாகியிருந்தனர். இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு இரகசியப் பொலிஸ் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: