புதன், 26 ஆகஸ்ட், 2020

நித்தியானந்தாவின் கைலாஸா அந்தமான் நிக்கோபார் தீவுகளில்தானோ? BSNL Connection கூட்டி கழித்து பாருங்க

 S
ukirtha Rani :
பல மாதங்களாக எவ்வித சத்தமும் இல்லாதிருந்த நித்யானந்தாவும் அவனுடைய சீடைகளும் கடந்த பத்து நாட்களாகத்தான் அதிகமாக வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். BSNL நிறுவனம் கடந்த ஆகஸ்ட் பத்தாம் தேதி அதிவேக இணைய சேவையை அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு வழங்கியுள்ளது. சரியாக அதன்பிறகுதான் நித்தியின் சீடைகளும் நித்தியும் வீடியோக்களை பகிர ஆரம்பிக்கிறார்கள். தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, தம் ஆட்களுடன் அந்தமானில் உள்ள ஏதோ ஒரு தீவில்தான் தங்கியிருக்க வேண்டும் அங்கிருந்துதான் அவன் கைலாஷா, தனி நாடு, தனி வங்கி, தனி நாணயம் என கதை அளந்து கொண்டிருக்கிறான். தேடப்படும் குற்றவாளியான அவன் இவ்வளவு தைரியமாகப் பேசிக் கொண்டிருக்கிறான் என்றால் ஆளும் பாஜக அரசின் ஆதரவு அவனுக்கு இருக்கிறதோ என்னும் ஐயப்பாடு எழுகிறது.

ஏனென்றால் இந்து மதத்தை இந்துத்துவத்தை முன்வைத்து ஆண்டு கொண்டிருக்கும் அரசுக்கு நித்தியைப் போன்ற சாமியார்களின் துணையும் தொடர்பும் தேவையான ஒன்று. 

நித்தி இன்று வெளியிட்டிருக்கும் நாணயங்களுக்குக்கூட சமஸ்கிருதத்தில்தான் பெயர் வைத்திருக்கிறான். சாமியார்களுக்கு ஆளும் பாஜக மத்திய அரசு தரும் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே.. எனவே இராமர், முருகர், விநாயகர் இவர்களை வைத்து அரசியல் செய்யும் அரசு, சிவனை வைத்து அரசியல் செய்யும் நித்தியானந்தா, தங்களுக்குத் தேவைப்படுவான் என்றே அவனுக்குத் தேவையான உதவியைச் செய்கிறதோ எனத் தோன்றுகிறது.

நித்தியானந்தாவின் இன்றைய நாணயம் வெளியிடும் வீடியோவை இந்த ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தந்து வெளியிட வேண்டும்? அவனால் மக்களுக்கு ஒரு பைசாவாவது பயன் இருக்கிறதா? அந்த வீடியோ எப்படி கிடைக்கிறது, அதில் உள்ள நிகழ்ச்சிகள் உண்மைதானா என எவ்வித நம்பகத்தன்மையும் அறியாமல் வீடியோவை வெளியிடுகிறார்கள்.

அதைப் பார்த்து உண்மை என்று நம்பும் அளவுக்கு நாம் இருக்கிறோம் என்று நித்தியும் நம்புகிறான். ஊடகங்கள் இனியும் அவன் வீடியோவை வெளியிட்டு மக்களை முட்டாளாக்க வேண்டாம். அவனை ஏன் இன்னும் அரசு கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லை என்று கேள்வி எழுப்புங்கள்.அதுதான் தேவை.

1 கருத்து:

Vpmchandran84 சொன்னது…

அருமை சகோதரா