புதன், 26 ஆகஸ்ட், 2020

ஆக்ஸ்போர்டு கோவிஷீல்டு தடுப்பூசி - சென்னையில் பரிசோதிக்க முதலமைச்சர் உத்தரவு

maalaimalar.com: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பூசியை சென்னையில் பரிசோதிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
முதலமைச்சர் பழனிசாமி
சென்னை:கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன.அதன்படி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.
இந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.முதல் கட்டமாக, சென்னையில் 300 பேரிடம் கோவிஷீல்டு செலுத்தி பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் பரிசோதிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: