ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி: கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்கிறது மத்திய அரசு

மாலைமலர் : வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தலாம் என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி: ஆனால் இவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்கிறது மத்திய அரசு கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை சினமா ஷூட்டிங் நடத்தப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.    
மத்திய அரசுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பில் இருந்தும் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.   
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஜவடேகர், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: