செவ்வாய், 10 டிசம்பர், 2019

காசி ஆனந்தனின் காவிப்பாசம் . அர்ஜுன் சம்பத்தோடு கூட்டணி... .. வீடியோ


காசி ஆனந்தனின் காவிப்பாசம் பலபேரின் கண்களை திறந்து இருக்கிறது .
அது நல்லதுதான் .
கலைஞரை தவிர்ந்த வேறு எவருமே ஈழப்போராட்டம் தவறான பாதையில் செல்கிறது என்று கண்டிக்கவில்லை .
இது திராவிடர் இயக்கங்களின் வரலாற்று தவறு என்றே கருதவேண்டி உள்ளது.
காரணம்
அவர்கள் யார் குற்றியாவது அரிசி ஆகட்டும் என்ற நல்ல நோக்கத்தில் புலிகளின் பாசிச போக்கை கண்டும் காணாதது மாதிரி இருந்தனர் . தொடர்ந்து விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று கருதி கொண்டு பாசிச வெறியாட்டத்திற்கு துணை போய்விட்டனர்...
அதன் பெரும்பேறுதான் இன்றைய காசி ஆனந்தன் காவி அர்ஜுன் சம்பத் கூட்டணி!
ஜாதி மத பேதங்கள் அற்ற திராவிட கருத்தியலை தமிழ் தேசியர்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்பது முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய உண்மையாகும்
பெரும்பாலும் தமிழ் தேசியம் என்ற போர்வையில் அதற்குள் ஒளிந்திருக்கும் ஜாதி மத சமுக கட்டமைப்பை தக்கவைத்து கொள்ளும் நச்சு விதை இருப்பதை கவனிக்க பலரும் தவறி விட்டனர்.

அந்த விதை இன்று வெளிப்படையாக முளைவிட தொடங்கி உள்ளது .
வெளிபடையாக வீசும் சனாதன பாஜக காற்று அந்த நச்சு விதைகளுக்கு புதிய ஆக்சிஜனை வழங்கி உள்ளது .
நெடுமாறன் , காசி ஆனந்தன் போன்றோரின் நெருங்கிய நண்பர் காந்தளகம் சச்சிதானந்தம் இலங்கையில் சிவசேனாவை தொடங்கி வழிநடத்தி கொண்டுவருவதும்,
தமிழகத்தில் அர்ஜுன் சம்பத்தின் மேடையில் காவி விசத்தை காசி ஆனந்தன் கக்குவதும்,
அவர்களின் செயல்திட்டத்தின் அடுத்த கட்டம் என்றே பார்க்கவேண்டி உள்ளது .
இதையேதான் அவர்கள் முன்பு ;
புலி போர்வையிலும் நடத்தினார்கள் ..
எந்த காரணம் கொண்டும் புலிகள் ‘திராவிட கருத்தியலை தடுத்தே வந்துள்ள கபட அரசியலை’
இனியாவது திராவிடர் கழகங்கள் புரிந்து கொண்டால் போதும் .
இனியும் இந்த பாம்புகளுக்கு பால் வார்க்கும் வேலை வேண்டாமே..
நன்றி ..வாட்சைப்

கருத்துகள் இல்லை: