வியாழன், 12 டிசம்பர், 2019

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளும் புலம் பெயர் தமிழ் அகதிகளும்


உலகம் முழுவதும் பரவி இருக்கும் புலம் பெயர் ஈழத்தமிழ் அகதிகளே!
உங்களின் உடன் பிறப்புக்கள் சுமார் இரண்டு இலட்சம் பேர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அகதி முகாம்களில் வசிக்கின்றனர் ..
அங்கு வசிக்கும் இளம் சந்ததியினர்க்கு இலங்கையே தெரியாது.
அவர்களில் கணிசமானவர்கள்  இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து இந்தியர்களாகவே வளர்ந்து விட்டவர்கள் ..
அதாவது இலங்கை தமிழ் அகதிகளாகவே வளர்ந்து விட்ட இந்திய தமிழர்கள் அவர்கள். .
அவர்களை எல்லாம் ஊருக்கு திரும்பி போகலாம்தானே என்று உங்களில் பலர் கருதுவது தெரியும் .
அதற்கு காரணம் , நீங்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறி புலம் பெயர் நாடுகளில் நிரந்தரமாக் தங்கியதால் அங்கு உள்ள தமிழர்களின் குடிசன தொகை குறைந்து விட்டது என்பதுதான் .
அதனால் அங்கு தமிழர்களின் தேர்தல் தொகுதிகளும் குறைந்து விட்டன. உங்கள் இடப்பெயர்வினால் ஏற்பட்ட அந்த குடிசன வெற்றிடத்தை இவர்களை கொண்டு நிரப்பலாம் என்று நம்புகிறீர்கள்?
இந்தியாவில் பிறந்து வளர்ந்து ஒரு சராசரி இந்தியர்களாகவே மாறிவிட்ட உங்கள் உடன் பிறப்புக்கள், மீண்டும் வந்து அந்த இடங்களை நிரப்ப வேண்டும்? அதாவது உங்களின் அரசியல் பொழுது போக்கிற்கு இரையாக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் ?
அவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதை நீங்கள் விரும்பவில்லை என்று கருத இடமுண்டு .
எனவேதான் இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்று பாஜகவும் அதிமுகவும் கூறுவதை உங்கள் கள்ள மௌனத்தால் ஏற்று கொள்கிறீர்கள்.?


சர்வதேச அரசியல் .. ஐ நா .. மனித உரிமை என்றெல்லாம் வகுப்பெடுக்கும் புலம் பெயர் அகதி தமிழர்களாகிய நீங்கள்,
இந்த இரண்டு இலட்சம் ஈழத்தமிழ் உடன் பிறப்புக்கள் விடயத்தில் என்ன செய்ய போகிறீர்கள்?
சுப்பர் சிங்கர்களை அழைத்து மீண்டும் மீண்டும் மேடைகளில் கூத்தாட போகிறீர்களா?
இந்திய அரசுக்கு ஒரு சாதாரண கோரிக்கையைதானும் உங்கள்சர்வதேச அமைப்புக்கள் இதுவரை ஏன் வைக்கவில்லை?
ஐ நா சர்வதேச அகதிகள் ஆணையத்திடம் ஏன் இந்த விடயத்தை  ஏனின்னும் எடுத்து செல்லவில்லை?

கருத்துகள் இல்லை: