ஞாயிறு, 1 டிசம்பர், 2019

இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் மலையக மக்களையும் வடகிழக்கு மக்களையும் இணைத்து ... மறைக்கப்பட்ட வரலாறு

முன்னாள் எதிர்கட்சி தலைவர் திரு அமிர்தலிங்கம். தமிழரசுக்கட்சி தலைவர்  எஸ். எம். இராசமாணிக்கம் எம்பி , மட்டகளப்பு எம்பி சாம் தம்பிமுத்து . முன்னாள் அமைச்சர் எஸ்.திருச்செல்வம் . தமிழரசு கட்சியின் செனேட்டர் மு.மாணிக்கம் .தமிழ் காங்கிரஸ் எம்பி சிவசிதம்பரம் போன்றோர்  அன்று இதிமுக இளஞ்செழியன் போன்றோரோடு ஒரு புரிந்துணர்வில் செயல்பட்டிருந்தார்கள்
வளன்பிச்சைவளன் : பதிவு - 166  :  : ஈழத்தில் மலையமக்களும் யாழ்பாண
தமிழ் மக்களும் இணைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்ந்த இ. தி.மு.க மலையகத்தமிழர்களிடையே பரப்புரை மேற்கொண்டு அங்கு இ. தி.மு.க வின் கிளைகள் வேகமாக உருவாக்கியது. ஈழத்தமிழ் மக்களின் உரிமை போருக்கு இவர்களது ஒற்றுமை அவசியம் என மலையகமக்களின் குடியுரிமை காக போராடவும் தமிழ் மக்கள் சம உரிமை பெறவும் போராட தீர்மானித்து 1961 ல் அறிவிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தில் மலையக தமிழ் மக்களை பங்கு பெறச் செய்து புதிய வரலாற்றை உருவாக்கியது இ. தி.மு.க.
சிங்களயினவாதிகளின் விசம பிரச்சாரம்
இதேவேளை பிற்போடப்பட்ட யாழ்நகர மாநாட்டினை இ. தி. மு. க. 1958மே 24, 25 களில் நடாத்த தீர்மானித்ததுடன் தமிழரசுக்கட்சியினர் 1958 மே 25ம் திகதி வவுனியாவில் சிறப்பு மாநாடு ஒன்றினை நடாத்த தீர்மானித்திருந்தனர். மொழிப்பிரச்சினையில் தீவிரமாக இய ங் கிய இரு அமைப்புகளும் முறையே யாழ்பாணத்திலும் வவுனியாவிலும் கூட்டங்களை நடாத்த முனைந்தமையை கண்ணுற்ற) பேரினவாத சக்திகள் தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் அணிதிரண்டு தென்னிலங்கையை ஆக்கிரமிக்கப் போகின்றனர் எனும் வதந்தியை பரப்பினர். குறிப்பாக கே. எம். பி. ராஜரட்ன தலைமையில் இயங்கிய ஜாதிக விமுக்தி பெரமுன (தேசிய விடுதலை முன்னணி) இப்பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக இனக் கலவரம் தெ ன் னிலங் கையில் தோற்றுவிக்கப்பட்டதுடன் பல நுாறுதமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

இச் சந்தர்ப் பத்தில் யாழ் பாணத்தில் மாநாட்டை நடாத்தி திரு. இளஞ்செழியனின் தலைமையின் கீழ் தென்னிலங்கை திரும்பிய இ. தி. மு. க. உறுப்பினர்கள் சிங்கள மொழிச் சட்டத்தின் படி பேரூந்துகளில் சிங்கள எழுத்தான ஸ்ரீ  யை பொறுத்த வேண்டும் எனும் கட்டளையை மீறி தமது தமிழ் ஸ்ரீ எழுத்தினையையும் சிங்கள ஸ்ரீ  எழுத்தினையும் பொறுத்தி தென்னிலங்கை திரும்பிய வேளை கண்டி முல்கம்பளை என்னுமிடத்தில் சிங்கள இன வெறியர்களால் வழிமறிக்கப் பட்டு தாக்கப்பட்டனர். அவ்விடத்தில் வாழ்ந்த சமசமாஜக் கட்சியினர் இதனைக் கேள்வியுற்று தாக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்து சிங்கள இனவெறியர்களை பிடித்து பொலீசிடம் ஒப்படைக்கலாயினர். இவ் வின வெறியர்களுக் கு மூன் று வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதேவேளை தென்னிலங்கையின் கொழும்பு நகரம் உட்பட பல நகரங் களில் சமசமாஜக் கட்சி உறுப் பினர்கள் இனவெறியர்களை அடித்து துரத்தி தமிழ் மக்களை காப்பாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் மக்களுக்கெதிராக தென்னிலங்கை பகுதிகளில் சிங்கள இன வெறியர்களால் மேற் கொள் ளப் பட்ட படுகொலைகளு ம் , தாக்குதல்களும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய வாதம் மேலும் ஆழமாக வேரூன்ற வழிசமைத்தது. இவ்வினக்கலவரத்துடன் தமது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாத தமிழரசுக்கட்சியினரும் இ.தி.மு.க னரும் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து மற்றும் அதிகாரப்பரவல் முதலிய கோரிக்கைகள் தொடர்பான பிரச்சாரக்கூட்டங்களை தொடர்ந்து முன் னெடுத்தனர். தமிழரசுக் கட்சியினரும் ஏனைய வடகிழக்கு அமைப்புகளும் வடகிழக்கு பகுதிக்குள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் இவ்வினக்கலவரத்தின் பின்னரும் மலையகம் மற்றும் சிங்கள பகுதிகளில் மேற்கூறிய கோரிக்கைகளுடன் மலையக மக்களின் பிரஜாவுரிமைக் கோரிக்கையையும் முன்வைத்து தமது பிரச்சாரக் கூட்டங்களை இ.தி.மு.க.வினர் அச்சமின்றி நடாத்தலாயினர். இ.தி.மு.க. தென்னிலங்கை நகரங்களில் துணிந்து மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டங்கள் சிங்கள இனவாதிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. தமிழக தி. மு. க. வுடன் இணைத்து வடகிழக்கையும் மலையகத்தையும் தமிழ் நாட்டுடன் இணைத்து தனியான தமிழ் நாட்டினை உரு வாக்கப் போகின் றனர் எனும் கருத்து வளர்ந் தோங்கியது. இ.தி.மு.க வை தமிழக தி. மு. க வின் கிளை மற்றும் நாம் தமிழர் இயக்கம் என பெயர்சூட்டி இ தி. மு. க விற்கு எதிரான இனவாத பிரச்சாரத்தை இனவாதிகள் மேற்கொள்ளலாயினர். தமிழக நாம் தமிழர் இயக்கத் தலைவர் ஆதித்தனார் தமிழகம், இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் என்ற நாடுகளை உள்ளடக்கி அகண்ட தமிழ் இராச்சியம் கொள்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் கொழுந்து விட்டெரியும் இனவாத சூழலுக்கு மத்தியில் இ.தி.மு.க மிக சாதுரியமாகவும் யதார்த்தமாகவும் சிங்கள மக்களை அரவணைத்துச் செல்லும் வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது.
இடதுசாரி அரசியல் கருத்துக்களை தம் சீர்திருத்த கருத்துக்களுடனும் தமிழ் தேசியவாதக் கருத்துக்களுடன் இணைத்துக் கொண்டமையே இதற்கான பிரதான காரணமாகும். குறிப்பாக இ.தி.மு.கவின் தலைவர் ஏ. இளஞ்செழியனும் முன்னணி உறுப்பினர்களும் இலங்கை சமசமாஜக் கட்சியினருடன் கொண்டிருந்த தொடர்பு மற்றும் இக்காலகட்டத்தில் இலங்கை சமசமாஜக் கட்சி தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பாகவும் அதிகார பரவல் தொடர்பாகவும் சரியான நிலைப் பாட்டினைக் கொண்டிருந்தமை என்பன இதற்கான காரணங்களாகும்.
#சிங்களயினவாதிகளின்பொய்பிரச்சாரத்தைமுறியடித்த . தி.மு.க
1959ம் ஆண்டு அக்டோபர் 25ம் திகதி கொழும்பு நாராயண குருமண்டபத்தில் இ.தி.மு.க ஓர் பிரச்சாரக்கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது. இக்கூட்டத்திற்காக வெளியிட்ட துண்டு பிரசுரத்தில்
வகுப்பு வாதம் ஒழிக! வெல்க தமிழ்!!
தேசிய ஐக்கியம் மலர்க!! ஐக்கிய இலங்கைக்காக! சிங்களவர் தமிழர் ஒற்றுமைக்காக! சமதர்ம குடியரசு அமைப்புக்காக!!! (17) என குறிப்பிட்டுள்ளதுடன் பிரதான பேச்சாளர்கள் இக்குறிக்கோள்களை தமது சொற்பொழிவுகளின் போது வலியுறுத்தி வந்தமையினால் கூட்டம் நடாத்தப்படும் சிங்களப்பகுதிகளின் கீழ்மட்ட சிங்களப் பொதுமக்களின் ஆதரவை இ. தி. மு. க. வினர் பெறக்கூடியதாக இருந்தது. இதே ஆண்டு இ.தி.மு.க வின் நீர்கொழும்பு மாவட்டச் செயலாளர் திரு. கே. பி குணசீலர் பொதுக்கூட்டமொன்றையும், ஊர்வலம் ஒன்றினையும் நீர் கொழும்பில் ஒழுங்கு செய்திருந்தார். இவ் வூர் வலத் தையும் கூட்டத் தையும் நடாத் த விடாது சுற்றி வளைத் துக் கொண்ட சிங் களக் காடையர்களுக்கு மேற் படி இ.தி.மு.க வின் கொள்கையை திரு. ஏ. இளஞ்செழியன் விளக்கியதுடன் அவர்களும் கூட்டத்தில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்,
#செல்வா பண்டாரநாயகே ஒப்பந்தம்
இவ்வாறு தென்னிலங்கை மக்களின் பிரச்சினைகளுடன் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கான போராட்டத்தை இ.தி.மு.க வினர் முன் னெடுத்த போதிலும் இவ்வியக்கத்தினை ஓர் தமிழ் இனவாத இயக்கமாகப் பிரச்சாரம் செய்வதினை சிங்கள இனவாத சக்திகள் நிறுத்திக் கொள்ளவில்லை.
இனக்கலவரத்தின் பின்னரும் தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் வலுவடைந் து வந்தமையினாலும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்த திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க தமிழரசுக் கட்சித்தலைவர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் அமுல்படுத்த முனைந்தார். இம்முயற்சியின் ஓர் விளைவாக திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க அவர்கள் தம் கட்சி அங்கத்தினர்கள் மத்தியில் தமிழ் மக்களின் நியாயமான உரிமையை ஏற்கச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். படம்
இனக்கலவரத்திற்குப் பின்னர் 1959 மே 17ம் திகதி அன்று குருநாகல் நகர மண்டபத்தில் நடந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 7வது அமர்வில், கடந்த வருடம் நாடு கடுமையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தது. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வளரும் இன வாத பதற்ற நிலை பரந்த கட்டுப் பாடற்ற தன் மையுடன் வெடிப்புற்றதுடன் மே மாத இறுதிவரை பரவியது. இது அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. நிலைமை மிக விரைவில் நியாய மான ரீதியில் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் இக்காலகட்டத்தின் துன்பகரமான சம்பவங்கள் ஆகக் குறைந்தது சில நன்மைகளைத் தரும். இனவாத வித்தியாசங்களை பெருமளவு கொண்டு சென்றதன் மூலம் கடும் பிரதிபலனை உருவாக்கிய தீவிரவாதிகள் உட்பட அனைவருக்கும் இது ஞாபகத்திலிருக்கச்செய்யும். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் உருவாகும் என நான் நினைக்கவில்லை. (18) என உரையாற்றி தாம் முன்வைத்த இரு மசோதாக்களை நிறைவேற்றுவற்கான ஆணையை தமது கட்சி அங்கத்தவர்களிடம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆயினும் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க இனவாத சக்தியினால் ஒரு சில மாதங்களின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். 1959 செப்டம்பர் 25ம் திகதி திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதுடன் பண்டா-செல்வா ஒப்பந்தமும் கைவிடப்பட்டது.
திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவின் மறைவுடன் அவரால் முன்வைக்கப்பட்ட மசோதாக்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கைவிட்டது.

சமசமாஜ கட்சியின் தடுமாற்றம்
நாடு ஓர் பொதுத்தேர்தலை சந்தித்தது. இச் சந்தர்ப்பத்தில் பொதுத்தேர்தலின் போது எப்பிரிவினரை ஆதரிப்பது என்ற பிரச்சினை இ.தி.மு.க வினர் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக 1959 டிசெம்பர் 17ம் திகதி திரு. ஏ. இளஞ்செழியனின் தலைமையில் கூடிய இ.தி.மு.க பொதுச்சபை தமிழ் மொழிக்கு சம அந்தஸ்தினை வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மற்றும் சமதர்ம ஆட்சியினை உருவாக்குவதற்கான கொள்கையை முன் வைத்துள்ள இலங்கை சமசமாஜக் கட்சியினை ஆதரிப்பதென தீர்மானித்தது. இதன்படி 1960 மார்ச்சில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சமசமாஜ கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக்கூட்டங்களை நடாத்திய து. போதியளவு பெரும்பான்மையை ஸ்ரீ. ல சு. க. கொண்டிராமையினால் 1960 ஜூலையில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது.
1960 ஜூலையில் நடந்த பொதுத்தேர்தலின் போது இ. தி. மு. க. சமசமாஜ கட்சியினருக்கு ஆதரவு வழங்காது தமிழரசுக் கட்சியினருக்கு ஆதரவு நல்கியது. இலங்கை சமசமாஜ கட்சியினர் 1960 மார்ச் பொதுத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கெதிராக 120 தொகுதிகளில் போட்டியிட்டதுடன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கடைப்பிடிக்கும் இனவாத நிலைப்பாட்டினை வன்மையாகக் கண்டித்தது. ஆனால் 1960 ஜூலையில் நடந்த பொதுத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றினை செய்து கொண்டது. சமதர்மக் கொள்கைக்காகவும் மொழி சம அந்தஸ்திற்காகவும் முன் நின்ற சமசமாஜக் கட்சியினர் நான் கு மாதங்களுக் கு ள் அக் கொள்கைகளுக்கு எதிரான நிலைப் பாட்டினைக் கொண்ட ஸ்ரீ ல. சு. க. யுடன் போட்டித் தவிர்ப்பினை மேற் கொண்டமை அக்கொள்கைகளின் காரணமாக நட்புறவைப் பேணிய இ.தி.மு.க வினை சிக்கலுக்குள்ளாக்கியது.
இதிமுக தமிரசுகட்சிக்குஆதரவு
| லங்கா சமசமாஜக் கட்சியின் இந் நிலைப்பாட்டினை கண்டித்த இ. தி. மு. க. மொழிக்கொள்கைக்காகவும் அதே நேரத்தில் மலையக மக்களின் பிரஜாவுரிமைக்காகவும் குரலெழுப்பும் தமிழரசுக் கட்சிக்கு வடகிழக்கு பகுதிகளில் ஆதரவு வழங்குவது எனத் தீர்மானித்தது. அத்துடன் ஏனைய மாகாணங்களில் இ.தி.மு.க கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதெனவும் தீர்மானித்தது. இ. தி. மு. க. வின் இந்நடவடிக்கை நாளடைவில் இ.தி.மு.க தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட வழிசமைத்தது.
வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் "குரலெழுப்பிய தமிழரசுக் கட்சியினர் மலையக மக்களின் குடியுரிமைக்காகவும் குரலெழுப்பி வருவதால் அக்கட்சியினருடன் கூட்டுச்சேர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இலகுவில் இப்பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடிய நிர்ப்பந்தத்தினை அரசுக்கு ஏற்படுத்தலாம் எனும் நிலைப்பாட்டினை இ.தி.மு.க அறுபதுகளின் இறுதியில் மேற்கொண்டது.
மலையக தமிழ் மக்களைஇணைத்து
சத்தியாகிரக போராட்டம்
இந்நிலைப்பாட்டினை அமுல் படுத்தும் வகையில் 1960 டிசெம்பர் 17ம், 18ம் திகதிகளில் கூடிய இ.தி.மு.க பொதுச் சபை மேற் கூறிய நிலைப் பாட்டி னை ஏக மான தாக ஏற்றுக் கொண்டதுடன் 1961 ஜனவரி 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியினர் நடாத்தவுள் ள சத்தியாகிரகப் போராட்டத்தில் இ.தி.மு.க உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனும் தீர்மானத்தையும் மேற்கொண்டது.
இச் சத்தியாகிரகப் போராட்டத்தைப் பற்றியும் மலையகத்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கு பற்றுவதன் அவசியத்தை அறிவுறுத்தும் வகையில் இ.தி.மு.க 10-12-1960 அன்று கலாசார மாநாடு ஒன்றினை பண்டாரவளை நகர மண்டபத்தில் நடாத்தியது. இம்மாநாட்டில் தமிழரசுக் கட்சி தலைவர்களான மட்டக்களப் பினைச் சார்ந்த மறைந்த முன்னால் எம்பி திரு சாம் தம்பிமுத்து ( புலிகளால் பின்பு சுட்டு கொல்லப்பட்டார்) . முன்னாள் அமைச்சர் எம். திருச்செல்வம், கியூ.சி    முன்னாள் செனேட்டர் மு.மாணிக்கம் என்போர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் போது திரு. ஏ. இளஞ்செழியன் மலையகத் தமிழர் இப்போராட்டத் தில் இணைவதற்கான அவசியத்தைப்பற்றி வலி யுறுத்தலானார். இதன் விளைவாக மலையக இளைஞர்கள் திரு. இளஞ்செழியன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
அது நாள்வரை வடகிழக்கு மக்களால் தனித்து முன்னெடுத்த போராட்டங்களை போலல்லாது இச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மலையக மக்களும் பங்கு கொண்டமை அன்றைய ஆட்சியாளர்களைத் திணற வைத்தது. இச்சத்தியாக்கிரகம் இராணுவத்தினைக் கொண்டு முறியடிக்கப்பட்டதுடன் மலையகப் பிரேதசங்களுக்கும் இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. இச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கின் தலைவர்கள் கைது செய் யப் பட்டு தடுப் புக்காவலில் 10 வைக்கப்பட்டனர்.
இ.தி.மு.க. வின் பிரவேசம் காரணமாக மலையகத்தின் பாரிய தொழிற்சங்கங்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், ஜனநாயக தொழிலாளர் காங்கிரசும் ஓர் நிலைப்பாட்டினை மேற்கொள்ள நேர்ந்தது. இ.தி.மு.க. வின் ஆதரவுடன் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கொழும்பு புல்லர்ஸ் வீதியில் உள்ள ஈழநாடு பத்திரிகையைச் சார்ந்த கே. எஸ். தங்கராசாவின் இல்லத்தில் ஓழுங்கு செய்யப்பட்டது. தமிழ் காங்கிரசைச் சார்ந்த எம். சிவசிதம்பரம் கம்யூனி ஸ்ட் கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கத் தலைவர்களான எஸ். நடேசன் , ரொசாரியோ பர்ணான்டோ , இலங்கைத் தொழிலாளர் காங்கிரசைச்சார்ந்த கே. இராஜலிங்கம், இ தி. மு. க வைச்சார்ந்த ஏ. இளஞ்செழியன், மு. அ. வேலழகன் மற்றும் தமிழ் அபிமானிகளான சேர். கந்தையா வைத்தியநாதன், டாக்டர் பொன்னையா என்போர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் தலைவர்களை விடுதலை செய்யும் வரை மற்றும் மலையக மக்களின் குடியுரிமை உட்பட தமிழ் மக்களின் உரிமைகளை பெறும் வரை பொது வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவேண்டுமெனும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் மலையகத்தில் போராட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை முறையே ஏ. இளஞ்செழியன், மு.அ. வேலழகன் எஸ். நடேசன், ரொசாரியோ பர்ணாந்து என்போரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெற்றியீட்டும் வரை வேலைநிறுத்தத்தைத் தொடருவோம் என சபதமெடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேலை நிறுத்தத்தை மேற் கொண்ட மறுதினமே அரசின் நிர்ப்பந்தத்திற்கு இணங் கி வேலைநிறுத்தத்திலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டது. ஓர் நீண்ட பொது வேலை நிறுத்தத்திற்கு தம்மை தயார் செய்திருந்த தோட்டத் தொழிலாளர்கள் இதனால் பெரும் ஏமாற்றத்திற்கும் கடன் சுமைக்கும் ஆ ளான துடன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தினையும் தவறவிட்டனர்.
சத்தியாக்கிரகப் போராட்டத்துடன் இ. தி. மு. க. விற்கும் தமிழரசுக் கட்சிக்கும் நல்லுறவு மேலும் வலுவடைந்து இ. தொ. கா, ஜ.தொ.கா.. என்பவற்றிற்கு மாற்று சக்தியாக இ.தி.மு.க. வை தமிழரசுக் கட்சியினர் கணிக்கலாயினர். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இ. தி. மு. க. வுடன் உத்தியோக பூர்வமாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள முனைந்தனர். தமிழீழத்தின் சுபாஷ் சந்திரபோஸ் என் அழைக்கப்பட்ட அரசு ஊழியரான திரு. இராசரத்தினம் இ.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. ஏ. இளஞ்செழியனை தடுப்புக் காவலிலுள்ள திரு. அ. அமிர்தலிங்கத்தின் உறவினர் எனக்கூறி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எஸ். எம். இராசமாணிக்கம் எம்பி , அ. அமிர்தலிங்கம் empiஎம்பி , டாக்டர் இ. வி. எம். நாகநாதன் empiஎம்பி  ஆகியோருடன் திரு. ஏ. இளஞ்செழியன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது மொழியுரிமைக் கோரிக்கையுடன், மலையக மக்களின் குடியுரிமைக் கோரிக்கையும் தமிழரசுக்கட்சி முன்வைக்கின்றமையினால் இ.தி.மு.க. தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைந்து செயற் படுவது பற்றி கலந்துரையாடப்பட்டது.

தமிழரசுக்கட்சியுடன் கூட்டிணைந்து செயற்படுவது தொடர்பாக கலந்துரையாட இ.தி.மு.க இதேயாண்டு பண்டாரவளை மாவட்ட கிளை சார்பாக கூட்டமொன்றினை நடாத்தியது, தமிழரசுக் கட்சியின் சார்பாக திரு. திருச்செல்வம் கியூ. சி. அக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், சமஷ்டி ஆட்சி கிடைத்தால் மலையகத்திற்கு எவ்வாறான நன்மை கிடைக்குமென இ.தி.மு.க உறுப்பினர் கேள்வியெழுப்பினர். தடுப்புக்காவலிலுள்ள தலைவர்கள் விடுதலை பெற்று வந்தவுடன் மற்றும் லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் தந்தை செல்வா நாடு திரும்பியதும் இக்கேள்விகளுக்கு பதிலளிப்பார் என திரு. திருச்செல்வம் கூறியதுடன் இதனையொத்த பிறிதொரு கூட்டம் நுவரெலி யா நகரில் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றும் நடாத்தப்பட்டது.
நுவரெலியாவில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை பெற்ற திரு. அ.அமிர்தலிங்கம் எம். சிவசிதம்பரம், திருமதி. மங்கையர்க்கரசி முதலியோர் கலந்து கொண் டதுடன் பங்கு பற்றுநர்களின் கேள்விகளுக்கு இவர்கள் விடையளித்தனர். இவ்விரு கூட்டங்களின் பின்னர் தமிழரசுக்கட்சியினருடன் கூட்டிணைந்து செயற்படும் தீர்மானத்தை இதிமுக. வினர் மேற்கொண்டனர்.
தொடரும்......

கருத்துகள் இல்லை: