சனி, 7 டிசம்பர், 2019

உத்தர பிரதேச பாஜக எம் எல் ஏயை என்கவுண்டர் செய்வார்களா? உன்னாவ் பாலியல் கொலை வழக்கு ...


உத்திரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் போன டிசம்பர் மாதம் பாஜக தலைவர் ஒருவர் தன் சகாக்களுடன் சேர்ந்து துப்பாக்கி முனையில் ஒரு 17 வயது சிறுமியை வன்புணர்வு செய்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் எடுத்துக்கொள்ளப்படவில்லை. FIR போடப்படவில்லை. பின்னர் சிலர் உதவியுடன் நீதிமன்றத்தின் மூலம் ஆணை வாங்கி ஒருவழியாக மார்ச் மாதம், அதாவது நான்கு மாதம் கழித்து வழக்கு பதியப்படுகிறது. பின்னர் அந்தப் பெண்ணின் தந்தை கொல்லப்படுகிறார். உதவிய உறவினர்கள் கொல்லப்படுகிறார்கள். பின்னர் அந்தப் பெண் எரித்துக் கொல்லப்படுகிறார்.
இதேபோல நேற்றும் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணையும் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எரித்திருக்கிறார்கள். 90% தீக்காயங்களுடன் அந்தப் பெண்ணும் சற்றுமுன் இறந்துவிட்டார்.
வன்புணர்வு மற்றும் கொலைகளின் தலைநகரமாக உத்திரபிரதேசம் திகழ்கிறது.
வன்புணர்வு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக மட்டும் செய்யப்பட்டதல்ல. பாஜககாரர்கள் இந்த உன்னாவ் பெண்ணை வைத்து ஊருக்கே பாடம் நடத்தியிருக்கிறார்கள். "நாங்கள் அப்படித்தான் செய்வோம். எங்களைப் பற்றி புகார் செய்தால் இதுதான் நிலைமை," என்கிற எச்சரிக்கைப் பாடத்தை நடத்தியிருக்கிறார்கள்.

அதேநாள் ஹைதரபாத்தில் ஒரு டாக்டரை வன்புணர்வு செய்து எரித்துக்கொன்ற நால்வர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஊரே அந்தக் கொலைகளைக் கொண்டாடுகின்றது. நிற்க.
அந்த நால்வர் உயர்சாதி அரசியல்வாதிகளாக இருந்திருந்தால்? அதிலும் பாஜககாரர்களாக இருந்திருந்தால்? எரித்துக் கொல்லப்பட்ட டாக்டரின் உறவினர்கள் எரித்துக் கொல்லப்பட்டிருப்பார்கள்.
சார். இந்த நாட்டில் நீதி கிடைத்துவிட்டதென நீங்கள் கொண்டாடுவதற்கோ, மகிழ்வதற்கோ எதுவுமே இல்லை. குற்றவாளிகள் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள். ஆனால் தண்டனைகளும், எண்கவுண்டர்களும் கீழடுக்குகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த நாட்டின் நீதி எப்படி இருக்கிறது தெரியுமா? ஒருவேளை நாளை நம் உறவினரில், அறிந்தவர் தெரிந்தவரில் ஏதேனும் ஒரு பெண்ணுக்கு ஏதாவது நேர்ந்தால் குற்றமிழைத்தவன் சமூகத்தின் கீழடுக்கைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும். இல்லையென்றால் மீதமிருப்போரும் போய்ச்சேர வேண்டிதுதான். பாரத் மாதா கீ ஜே!!!
சமுகவலையில் .. நன்றி

கருத்துகள் இல்லை: