


ஒற்றைக் கனவைக் கண்டு, அக்கனவை நோக்கி கடுமையாக உழைத்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருந்த அவளது கால்களை இலக்கை அடையும் கடைசி நேரத்தில் அநியாயமாக வெட்டி எறிந்திருக்கிறீர்கள். அவளுடைய கோபம் பெருங்கோபம். “உணர்ச்சிவசப்படாமல் அணுகுவோம்,” என மடத்தனமாக தத்துவம் பேசிக்கொண்டிருக்கும் மனசாட்சி இல்லாத மிருகங்கங்களுக்கு அந்த ஏழை இலட்சியவாதியின் கோபம் புரியவே போவதில்லை.
உங்களுக்கெல்லாம் அவள் வாழ்க்கையைப் பற்றி அல்ல, மரணத்தைப் பற்றிப் பேசவும் தகுதி இல்லை. அனிதாவை கொன்றது நீட். அனிதாவை கொன்றது பாஜக எனும் பார்ப்பனிய அரசு. அனிதாவைக் கொன்றது எடப்பாடியின் அடிமை அரசு. அனிதாவைக் கொன்றது, சமூகநீதியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது விஷயமே புரியாமல் சமச்சீர் vs cbse என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த அறிவுகெட்ட முட்டாள்கள். அனிதாவின் பிணத்திற்கு இப்போது ஆர அமர கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் உலக வரலாறு காணா சைக்கோக்கள், சீரியல் கில்லர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக