சனி, 9 செப்டம்பர், 2017

சீனா செல்ல கேரளா அமைச்சருக்கு மத்திய அரசு மறுப்பு

திருவனந்தபுரம்:சீனாவில் நடைபெறும் உலக சுற்றுலா கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செல்ல இருந்த கேரள சுற்றுலா அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. சீனாவில் செப்- 11ல் உலக சுற்றுலா கழக நிகழ்ச்சி நடக்கிறது. ஐ.நா சபை நடத்தும் இந்த உலக அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள சுற்றுலா அமைச்சர் சுரேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து அவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது. அனுமதி மறுப்பு இந்நிலையில், சீனா செல்வதற்கு சுரேந்திரன் அழைப்பு கடிதத்துடன் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். ஆனால், அவருக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை தேவை என பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.அனைத்து அம்சங்களையும் சரிபார்த்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நக்கீரன்

கருத்துகள் இல்லை: