வியாழன், 7 செப்டம்பர், 2017

அனிதாவுக்கு அட்மிஷன் கிடைக்காதது அவரது தலைவிதி "லலிதா குமாரமங்கலம் (தேசிய பெண்கள் ஆணையத் தலைவர்)

அனிதா மரணத்தில் சட்ட விதிகள் படி தேசிய பெண்கள் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார். மேலும் நடவடிக்கை எடுப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகும் என்றும் சமூக நீதி என்ற பெயரில் மொழி அடையாளங்களைக் கொண்டு தேசிய தகுதி தேர்வுகளை எதிர்ப்பது சரி அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 உன்னை பிஞ்ச செருப்பால அடித்து விட்டு , எல்லாம் தலைவிதி . உங்களை நான் அடிக்கனும் என்று இருக்கு . நீங்கள் அடி வாங்க வேண்டும் என்று இருக்கு , எல்லாம் விதி என்று சொன்னால் எப்படி இருக்கும் .

லலிதா குமாரமங்கலம் (Lalitha Kumaramangalam) (பிறப்பு: 1957/58), அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளராக இருந்தவர்.
இவர்  மறைந்த  மத்திய அமைச்சர் மோகன்குமாரமங்கலத்தின் மகள் ஆவார்.இவரது அண்ணன் ரங்கராஜன் குமாரமங்கலமும்மத்திய அமைச்சராக இருந்தவர்தான் 

லலிதா குமாரமங்கலம் மறைந்த பொதுவுடமைக் கட்சியின் தலைவரும், தொழிற்சங்கத் தலைவருமான மோகன் குமாரமங்கலத்தின் மகள் ஆவார். இவரது தாயார் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கல்யாணி முகர்ஜி ஆவார். இவரது சகோதரர் ரங்கராஜன் குமாரமங்கலம். இவரது தந்தை வழி தாத்தா பி. சுப்பராயன் முன்னாள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். இந்திய இராணுவத்தின் தரைப்படைத் தலைமைத் தளபதியாக இருந்த பி. பி. குமாரமங்கலம் இவரது பெரியப்பா ஆவார்.

அரசியல் லலிதா குமாரமங்கலம் புதுதில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளநிலை பொருளாதர பட்டமும், சென்னைப் பல்கலைகழகத்தில் வணிக நிர்வாகவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். தன் சகோதரர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மறைவுக்குப்பின் 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவைக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவர். பிரகிருதி என்ற அறக்கட்டளையை நடத்தி வருபவர். 17 செப்டம்பர் 2014இல் இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர்.[1]

கருத்துகள் இல்லை: