புதன், 6 செப்டம்பர், 2017

கௌரி லங்கேஷ் படுகொலைக்கு அமெரிக்கா கண்டனம்! மூத்த பெண் பத்திரிகையாளர் பெங்களூரிவில்

The US mission joined advocates of press freedom to denounce the murder of journalist Gauri Lankesh, who was gunned down at her home in Bengaluru on Tuesday. ... The US embassy on Wednesday condemned the murder of noted journalist Gauri Lankesh, who was gunned down by unidentified men ...
மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு அமெரிக்க தூதரகம் கண்டனம் புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வந்தார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார். நேற்று மாலை தனது இல்லத்தில் கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், கவுரி லங்கேஷ்வர் கொலை செய்யப்பட்டதற்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவருடடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுக்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது. அதேபோல் பிரபல பத்திரிக்கை நிறுவனங்களும் கவுரி மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாலைலமலர்

கருத்துகள் இல்லை: