புதன், 19 ஜூலை, 2017

நீதிபதி கர்ணன் சிறையில் ... டி ஐ ஜி ரூபா தொலைகாட்சிகளில் கீரோயின்

Sivasankaran Saravanan · ரூபா என்ற காவல்துறை அதிகாரி தனது சக அதிகாரிகள் மீது ஊழல் புகாரை வைக்கிறார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தருகிறார் . அதைத்தொடர்ந்து அவர் பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். அரசியல்வாதிகள் பலரும் ஒட்டுமொத்த ஊடகங்களும் அவரை நேர்மையின் அடையாளமாக கொண்டாடுகிறார்கள். நீதியரசர் கர்ணன் சக நீதிபதிகள் மீது ஊழல் புகாரை முன்வைக்கிறார். அவருக்கு பைத்தியக்கார பட்டம் கட்டி அவரை கைது செய்துள்ளனர். அவருக்கு ஆதரவாக எந்த குரலையும் காணவில்லை. ஊழலை எதிர்க்கவேண்டுமென்றால் கூட இந்த நாட்டிலே ஒரு பிரிவினருக்குத்தான் அனுமதி உண்டு போல..!

கருத்துகள் இல்லை: