சனி, 3 ஜூன், 2017

அண்ணனின் மணப்பெண் கழுத்தில் தாலி கட்டிய தம்பி .. "புதுப்பேட்டை" படப்பாணியில் காட்டுமிராண்டிகள்

திருப்பத்தூர் அருகே பெண் பார்க்க சென்ற இடத்தில் ஏற்பட்ட காதலால் அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தம்பி தாலி கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ராஜேஷ், ரஞ்சித், வினோத் என்று 3 மகன்கள் உள்ளனர். இதில் ராஜேஷும், வினோத்தும் திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.< இந்த நிலையில் மூத்த மகன் ராஜேஷுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.< கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விருதுநகரை சேர்ந்த பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். திருப்பத்தூர் இலவம்பாடி வெண்கல் குன்றம் முருகன் கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

இதற்காக, நேற்று முன்தினம் இரவு மணமக்கள் அழைப்பு நடந்தது. பின்னர், நேற்று காலை கோவிலில் மணமேடை அமைத்து அங்கு திருமண சடங்குகள் நடந்தன. திருமணத்திற்காக வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணபந்தலில் அமர்ந்திருந்தனர். சுப முகூர்த்தம் நெருங்கியது.
முகூர்த்த நேரம் வந்ததும், மணமகன் ராஜேஷ் கையில் தாலி தரப்பட்டது.
மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றபோது, பின்னால் நின்றிருந்த அவரது தம்பி வினோத், திடீரென அண்ணன் ராஜேஷை தள்ளி விட்டு, கையில் மறைத்து வைத்திருந்த மற்றொரு தாலியை எடுத்து மணப்பெண் கழுத்தில் கட்டினார்.
உறவினர்கள் அவரை பிடித்து இழுத்தும், அடித்தும் பார்த்தனர். ஆனால், முரட்டுத்தனமான நடவடிக்கையால் வினோத் தாலி கட்டியதை யாராலும் தடுக்க முடியவில்லை.
இன்னும் சில நொடிகளில் புது வாழ்வு தொடங்க போகிறது என்று ஆசையில் இருந்த ராஜேஷின் தலையில் தம்பியின் செயல் இடி விழ செய்தது.
இதை சற்றும் எதிர் பார்க்காத உறவினர்கள் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர். மணமகனின் தம்பி தாலி கட்டியபோதும், மணமகள் மறுப்பேதும் கூறாமல் அமைதி காத்தார். சந்தேகமடைந்த உறவினர்கள், அடித்து உதைத்து அவர்களிடம் விசாரித்தனர்.
ராஜேஷிக்கு பெண் பார்க்க சென்றபோது, அவரது தம்பி வினோத்தும் உடன் சென்றார்.
தன்னை பெண் கேட்டு வந்தது, ராஜேஷ் என்பதை முதலில் அறியாமல், அவரது தம்பி தான் மாப்பிள்ளை என்று மணமகள் நினைத்துள்ளார். பார்த்த முதல் பார்வையே, வினோத் மீது காதல் வயப்பட்டார்.
பிறகு, ராஜேஷ் தான் மாப்பிள்ளை என்று தெரிய வந்ததையடுத்து மணமகள், தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடம் கூற முடியாமல் தவித்தார்.
நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இதையடுத்து, வினோத்திடம் ரகசியமாய் தனது காதலை கூறினார். வினோத்தும், அண்ணனுக்கு நிச்சயித்த பெண் என்பதை கொஞ்சமும் நினைக்காமல் காதலில் விழுந்தார்.
இருவரும் சேர்ந்து ரகசியமாய் காதலை வளர்த்து, இந்த அதிரடி திட்டத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இந்த காதலை முன்கூட்டியே சொல்லாமல் அசிங்கப்படுத்தி விட்டீர்களே? என ஆத்திரமடைந்த உறவினர்கள், மணமகளையும் அவருக்கு தாலி கட்டிய வினோத்தையும் மீண்டும் சரமாரியாக தாக்கினர்.
மணமகன் கோலத்தில் இருந்த அண்ணன் ராஜேஷ், விரக்தியடைந்து தான் அணிந்திருந்த வேட்டி, சட்டையை கிழித்து கோபத்தில் வீசி விட்டு கண்ணீர் விட்டு புறப்பட்டு சென்றார். இருவீட்டு உறவினர்களும், அடி, உதையை ஆசிர்வாதமாக வழங்கி விட்டு சாப்பிடாமலேயே புறப்பட்டு சென்றனர்.
அண்ணனுக்கு நிச்சயித்த பெண்ணை, மணமுடித்த வினோத்தை பெண் வீட்டார் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, விருந்திற்காக புது தம்பதியினர் விருதுநகர் அழைத்து செல்லப்பட்டனர். ஆனாலும், அண்ணனுக்கு துரோகம் செய்த வினோத்தை பெற்றோர் மன்னிக்கவில்லை. வீட்டு பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்தனர்.
இதனால் திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுப்பேட்டை என்ற சினிமா படத்தில், நடிகர் தனுஷ் ரவுடியாக நடித்திருப்பார். அதில், தனது கூட்டாளியின் தங்கை திருமண நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தனுஷ் செல்வார்.
அப்போது, மணமேடையில் மணமகளாக அமர்ந்திருக்கும் நடிகை சோனியா அகர்வால் மீது திடீர் காதல் வயப்பட்டு, தாலி எடுத்து கொடுக்க சென்ற அவர், திடீரென சோனியா அகர்வால் கழுத்தில் தாலி கட்டி விடுவார்.
இதேபோல் தற்போது, அண்ணனை தள்ளி விட்டு தம்பி மணமகளுக்கு தாலி கட்டியது சினிமா பாணியில் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் பேசிக் கொண்டனர். tamiloneindia

கருத்துகள் இல்லை: