வியாழன், 13 ஜூன், 2013

TMS இன் இறுதி அஞ்சலிக்கு சிவாஜி குடும்பத்தினர் யாரும் வரவில்லை ! படு சுயநல குடும்பம்

சென்னை: பிரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தவில்லையாம். பிரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் அண்மையில் காலமானார். அவருக்கு திரையுலகினிர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ஒரு முக்கியமான திரைக்குடும்பம் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லையாம். டிஎம்எஸ் எம்.ஜி.ஆருக்கு பாடினால் மக்கள் திலகம் தான் பாடிகிறாரோ என்று நினைக்கத் தோன்றும். அதே டிஎம்எஸ் சிவாஜி கணேசனுக்கு பாடினால் நடிகர் திலகம் தன் குரலில் தான் பாடுகிறாரோ என்று தோன்றும். அந்த அளவுக்கு குரலை மாற்றி பாடுவார். அவர் சிவாஜி கணேசனுக்கு ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் டிஎம்எஸ்ஸின் இறுதிச் சடங்கிலோ, அதன் பிறகு நடந்த துக்க நிகழ்ச்சிகளிலோ சிவாஜி கணேசன் வாரிசுகள் யாரும் கலந்து கொள்ளவில்லையாம். அவர்கள் வராதது தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
/tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: