திங்கள், 10 ஜூன், 2013

டெல்லியில் மீண்டும் Gang Rape! காரில் கல்லுரி மாணவி கற்பழிப்பு !

  காசியாபாத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவரை அவரது கார் டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அந்த மாணவி ஒருவரிடம் இருந்து காரை விலைக்கு வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து கார் குறித்த ஆவணங்களை வாங்க அம்மாணவி கடந்த சனிக்கிழமை இரவு கார் டிரைவர் யோகஷுடன் கிளம்பியுள்ளார். யோகேஷ் காரை விற்றவரின் வீட்டுக்கு செல்லாமல் வேறு வழியில் சென்று தனது நண்பர் ஆசிப் என்பவரை காரில் ஏற்றிக் கொண்டார். அவர் இருவரும் சேர்ந்து மாணவியை காரில் வைத்து கற்பழித்துள்ளனர். இதையடுத்து இரவு 12.30 மணிக்கு மாணவி தனது சகோதரிக்கு போன் செய்தார். உடனே அவர் தனது கணவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனது தங்கையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பதிவு செய்த போலீசார் யோகேஷை கைது செய்தனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: