வெள்ளி, 14 ஜூன், 2013

பொறியியல் கல்லுரிகளுக்கான தரவரிசையில் முதல் 10 பேரில் 7 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்

வாய்ப்புக் கொடுத்தால் சாதித்துக் காட்டுவர்; பொறியியல், மருத்துவக்
கல்லூரியில் சேருவதற்கான தர வரிசைப் பட்டி யலில் முதல் இடத்தைப் பெற்றவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அபினேஷ்.
பொறியியல் கல்லூரிக்கான முதல் 10 இடங் களுக்கான தர வரிசைப் பட்டியலில் 7 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவர்.
வாய்ப்புக் கொடுத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிப்பர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
பொறியியல் படிப்பிற்கான தர வரிசைப் பட்டி யல், நேற்று(12.6.2013) மாலை வெளியிடப்பட்டது. மாநிலத்தில் உள்ள, 550 பொறியியல் கல்லூரி களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள், இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. அண்ணா பல் கலை தகுதியான விண் ணப்பங்களாக ஏற்றுக் கொண்ட, 1.82 லட்சம் விண்ணப்பதாரர்களின், தர வரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், நேற்று மாலை வெளியிட்டார்.
பொதுக்கல்வி பிரிவு
திண்டுக்கல்லைச் சேர்ந்த அபினேஷ், முத லிடம் பிடித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சார்பிலும், இவரே, முதலிடம் பிடித்தார். நாமக்கல் மாவட்டம், கிரீன்பார்க் மெட்ரிகுலே சன் பள்ளியில் படித்த இவர், பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், முதலி டம் பிடித்தார். மருத்து வம், பொறியியல் இரண் டிலும், முதலிடத்தை பிடித்துள்ள அபினேஷ், மருத்துவம் படிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மருத்துவம் மற்றும் பொறியியல் தர வரிசைப் பட்டியலில், இரண்டாம் இடம் பிடித்த பரணீதரனும், மருத்துவம் படிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த ரகுநாதன், பொறியியல் தர வரிசைப் பட்டியலில், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். அண்ணா பல்கலையில், இ.சி.இ., அல்லது எம்.இ., படிப்பை தேர்வு செய்ய உள்ளதாக, ரகுநாதன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி ரவீணா, நான்காம் இடத்தை பிடித்துள் ளார். இவரும், மருத்துவ தர வரிசைப் பட்டியலில், முதல் பத்து இடங்களில் இடம் பிடித்துள்ளார். இவரும், மருத்துவம் படிக்க முடிவு செய்துள்ளார். தர வரிசைப் பட்டியலில், முதல் 15 இடங்களை பிடித்துள்ள மாணவர்களில், நான்கு பேர் மாண வியர்; 11 பேர் மாணவர்கள். இவர்களில், ஒருசிலரைத் தவிர, மற்ற அனைவரும், அண்ணா பல்கலையில் சேர முடிவு செய்துள்ளனர்.
தொழிற்கல்வி பிரிவு கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கவுதம், சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த ஆனந்த், கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பகவான்த் கவுசிக், ஆகியோர், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். முதல், 15 இடங்களில், இரண்டு பேர் மாணவியர்; 13 பேர், மாணவர்கள். இந்த பிரிவு மாணவர்கள் அனைவருமே, அண்ணா பல்கலையை தேர்வு செய்வர் என, எதிர்பார்க்கப் படுகிறது.
7,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து, 399 விண்ணப்பங்கள் பெறப் பட்டதில், 6,766 விண்ணப்பங் கள், தகுதியில்லாதவையாக நிராகரிப்பட்டதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. மீதம் உள்ள ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 633 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த அனைத்து மாணவர்களுடைய தர வரிசை விவரங்களும் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.
23 பேருக்கு, ரேண்டம் எண்
பொறியியல் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:
ஒரே, கட்-ஆப் மதிப்பெண், கணிதத்தில் ஒரே மதிப்பெண், இயற்பியலில் ஒரே மதிப்பெண், நான்காவது பாடத்தில் ஒரே மதிப்பெண், பிறந்த தேதியும் ஒன்று என, அனைத்து நிலைகளிலும் ஒரே மாதிரியாக வரும் மாணவர்களுக்கு, கடைசியாக, ரேண்டம் எண் பயன்படுத்தி, அதிக மதிப்பு கொண்ட மாணவருக்கு முன்னுரிமை தரப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, 23 மாணவர்களுக்கு, ரேண்டம் எண் பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு, ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். தர வரிசையில் முதலிடம் பிடித்த அபினேஷ்
மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,'' என, மருத்துவம் மற்றும் பொறியியல் தர வரிசைப் பட்டியலில், முதலிடம் பிடித்த,
திண்டுக்கல் மாணவர், எஸ்.அபினேஷ் கூறினார். அபினேஷ் கூறியதாவது: என் தந்தை சேகரும், தாய் லதாவும், நான் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டனர். எனக்கும், சிறு வயதில் இருந்து, ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும். மருத்துவ சேவையில் நம் நாட்டையும் வெளிநாடுகளை போல உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
- இவ்வாறு, அபினேஷ் கூறினார்.
பொறியியல் படிப்பில் பி.சி., பிரிவு மாணவர்கள் ஆதிக்கம்
பொறியியல் படிப்பில் சேர தகுதியான மாணவர் களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, 1.82 லட்சம் மாணவர்களில், 48.81 சதவீதத்துடன், பிற்படுத்தப் பட்டோர் பிரிவு மாணவர்கள், முதலிடத்தில் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து, 25.65 சதவீத மாணவர்கள் விண்ணப்பித்து, இரண்டாம் இடத்தில் உள்ளனர். பொறியியல் படிப்பில் சேர, 1.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் ஆய்வுக்குப்பின், 1.82 லட்சம் விண்ணப்பங்களை மட்டுமே, அண்ணா பல்கலை ஏற்றுக்கொண்டுள்ளது.
6,766 விண்ணப்பங்கள், தகுதியில்லாததால் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கப்பட்ட ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து 633 விண்ணப்பங்களில், அதிகபட்சமாக, பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து, 89,152 விண்ணப்பங்கள் இடம்பெற்றுள்ளன; இதன் சத வீதம், 48.81.இரண்டாவது இடத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்கள் உள்ளனர். இவர்கள், 46, 861 விண்ணப்பங்களை அளித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: