சனி, 15 ஜூன், 2013

என்ன நடந்தது ? மாக்சிஸ்ட திமுகவுக்கு ஆதரவு இல்லையாமே ?

மதுரை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கே இடமில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பிருந்தா காரத், ராஜ்யசபா திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கு இடமில்லை. ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தினால் அதுபற்றி மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸின் ஆதரவு இருப்பதாலேயே கனிமொழி வேட்புமனுத்தாக்கல் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் திடீரென மறுப்பும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: