வியாழன், 13 ஜூன், 2013

இது வேலைக்காவாது ! நிதிஷ்குமார் டா டா

பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் ஆகியோருடன் அத்வானி அவசரமாக டெலிபோனில் பேசினார். பாஜகவின் பிரச்சார குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதை இந்த இரு தலைவர்களும் விரும்பவில்லை. எனவே பாஜக கூட்டணியிலிருந்து  ஐக்கிய ஜனதா தளம் விலகலாம் என்று வந்த செய்தியைக் கேள்விப்பட்ட அத்வானி அவர்களை சமாதானம் செய்வதற்காக அவர்களுடன் அவசரமாக டெலிபோனில் பேசினார். இனிமேல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இருக்க வேண்டும். அவர்கள் கூட்டணியிலிருந்து விலகினால் வெற்றி வாய்ப்புப் பாதிக்கும் என்று அத்வானி கருதினார். எனவே அவர்களை கூட்டணியில் நீடிக்கச் செய்வதற்காக அவர்களுடன் அத்வானி டெலிபோனில் பேசி சமரசம் செய்தார்

கருத்துகள் இல்லை: