வெள்ளி, 14 ஜூன், 2013

நடிகை ஜியா கானின் தற்கொலைக்கு யார் யாரெல்லாம் காரணம் !

 பாலிவுட் நடிகை ஜியா கான் (வயது 25) மும்பையில் உள்ள தனது வீட்டில்
கடந்த 3-ம் தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை தொடர்பாக நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார்.  குற்றவாளி சுராஜின் தாயார் முன்னாள் ஹிந்தி பட நாயகி  ஜரீனா  வஹாப் ஆகும்
இவரை 13-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி
அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் ஜியாகானின் தாயார் நேற்று
பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜியா கான் மற்றும் சூரஜ் பஞ்சோலி பிரிவில் சல்மான் கானுக்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜியா கான் மற்றும் சூரஜ் பஞ்சோலி காதலுக்கு ஆதித்யா பஞ்சோலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதித்யா பஞ்சோலி, இவர்களின் காதலை முடிவுக்கு கொண்டுவர, சல்மான் கானிடம் தலையிட கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஜியாவும் சூரஜும் சமாதனமாக பிரிந்து செல்ல சல்மான் கான் பேச்சு வார்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஜியா கானின் தாயார் வெளியிட்டுள்ளவை காதல் கடிதங்களே, அவை தற்கொலை குறிப்புகள் இல்லை என்று சூரஜ்-ன் தாயார் ஜரினா வகாப் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: