வியாழன், 13 ஜூன், 2013

என்னை, வெட்டி விட்டது யார்?'' காங்கிரசுக்கு கலைஞர் கேள்வி

சென்னை : ""ஒட்டியிருந்த என்னை, வெட்டி விட்டது யார்?'' என, காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் மகன் திருமணத்தை, சென்னை காமராஜர் அரங்கில், நேற்று நடத்தி வைத்து அவர் பேசியதாவது:விழாவில் வரவேற்றுப் பேசிய திருநாவுக்கரசர், "காங்கிரசோடு நான் ஒட்டி இருக்க வேண்டும்' என தெரிவித்தார். ஆனால், ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியும் என, கருதுகிறேன். அதைப்பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை.அரசியல் பேசுவதற்கு தனி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. திருமண நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது பொருத்தமில்லை. எனவே, இப்பிரச்னையை இதோடு நிறுத்தி விடுகிறேன்.கடந்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் சில நிகழ்வுகள் நடந்துவிட்டன. அதை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்குரியது பண்பாடு. அது, தன் மரியாதையை காப்பாற்றிக் கொண்டு, தமிழினத்தின் மரியாதையையும் காப்பாற்றும். எனவே, அனைவரிடமும் நட்பாகப் பழக வேண்டும்.
ஒருவர் எந்த கட்சியில் இருக்கிறார். எந்தக் கட்சிக்காக வாதாடுகிறார் என்பது முக்கியமல்ல. அவர் எங்கிருந்தாலும் நம்முடையவர் என்ற எண்ணத்தோடு பழக வேண்டும். இதுப்போல தான், திருநாவுக்கரசர் எங்கிருந்தாலும், அதைத் தாண்டி அவருடைய நண்பர்கள் பல கட்சிகளில் இருந்து வாழ்த்துகின்றனர்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.காங்கிரஸ், பா.ஜ.,- தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், திருமண விழாவில் பங்கேற்றனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: