வியாழன், 27 ஜூலை, 2017

'நீட்' தேர்வின் கொடுமை எனக்குப் புரியவில்லை" கமலஹாசன் என்றெரு நடிகன் கூறவருவது ...

கேள்வி:
"நான் பள்ளிப்படிப்பை முடிக்காததால் 'நீட்' தேர்வின் கொடுமை எனக்குப் புரியவில்லை", என்கிறாரே கமல் ஹாசன்?
பதில்:
நான் ஆண் என்பதால், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையின் தீவிரம் எனக்குப் புரியவில்லை.
நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்காததால், எனக்கு சாதிய வன்கொடுமையின் கொடூரம் புரியவில்லை.
என் காதல் திருமணத்திற்கு எனது பெற்றோர் தடையாக இல்லை என்பதால், எனக்கு சாதி ஆணவக்கொலையின் விபரீதம் விளங்கவில்லை.
நான் விவசாயி இல்லை என்பதால், காவிரி டெல்டா விவசாயிகளின் போராட்டம் எனக்குப் புரியவில்லை.
நான் படிக்காமலேயே வணிகம் செய்து செழிப்பாக வாழ்வதால், எனக்கு பட்டதாரிகளின் வேலையில்லா திண்ணாட்டம் பற்றிப் புரியவில்லை.
என்னுடைய கிராமத்தில் தண்ணீருக்குப் பஞ்சமில்லாததால், எனக்கு சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு புரியவில்லை.

நான் சென்னையின் மையப்பகுதியில் வசிப்பதால், எனக்கு மருத்துவ வசதியே இல்லாத கிராமங்களில் வாழும் மக்களின் துயரங்கள் புரியவில்லை.
நான் இன்னும் இளைஞனாக இருப்பதால், எனக்கு முதியோர் இல்லங்களின் கொடுமை விளங்கவில்லை.
ஆழ்வார்பேட்டை ஆண்டவர் சொன்னது நியாயமென்றால், மேற்சொன்னவையும் நியாயமன்றோ!
-GANESH BABU

கருத்துகள் இல்லை: