சனி, 25 பிப்ரவரி, 2017

கமல் : (சுப்பிர)மணிப்பயல்களை தமிழ்ப்பயல்கள் தேடிச்சென்று தாக்கு..

தன்னை எதிர்ப்பவர்களை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி, பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் நாகரீகமற்றதாக இருப்பதை கண்டுகொள்வதே இல்லை. பொறுக்கி, எலி, நக்சல், தேச விரோதி, முட்டாள், முதுகெலும்பில்லாதவன், படிப்பறிவு இல்லாதவன் என வெறுக்கத்தக்க வார்த்தைகளை உபயோகிக்கிறார். குறிப்பாக கமலை மிக அருவெறுக்க தக்க வகையில் வசைபாடுகிறார். நேற்றைய டுவிட்டர் பதிவில் சாக்கடையில் ஊறி கிடக்கும் விலங்குகள் சில சமயம் ஒப்பனையும் இட்டு வேஷம் கட்டும் என்று கூறவும் கமல் கொதித்துவிட்டார். உடனடியாக தனது டுவிட்டரில் மணிப்பயல்களை தமிழ்பயல்கள் தேடிச்சென்று தாக்கு. கேட்பதற்கு நாதியற்றோர் நாதியின்றி மரணிப்பர் என்றார். இது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இனி நீ தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.லைவ்டே

கருத்துகள் இல்லை: