செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

ஜெயா படத்தை அகற்றுங்கள்! – திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

ஏ 1 குற்றவாளி அம்மாவின் வாரிசுகள் அவரது ஆட்சியை அமைக்க சபதம் ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்தை சண்டைக்களமாக மாற்றிக் கொண்டிருந்த தருணத்தில், 18.02.2017 அன்று காலை 10.30 மணியளவில்
“குற்றவாளிகளுக்கு அரசு மரியாதையா? மெரினாவிலிருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று ! மாணவர்களே தீயசக்தி ஜெயாவின் படத்தை பாடநூலிலிருந்து அகற்றுங்கள்! மக்களே விலையில்லா பொருட்கள் கிரிமினல் போட்ட பிச்சையல்ல! ஜெயா படத்தை அகற்றுங்கள்!”
என்ற முழக்கத்தின் கீழ் திருச்சி-சத்திரம் பேருந்து நிலையத்தில் பறை ஓசையுடன் விண்ணதிரும் முழக்கங்களுடன் தொடங்கியது மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரத்தின்  மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆனந்த் தலைமையேற்க, மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் கண்டன உரையாற்றினர்.
அவர் உரையில்: “ஜெயா-சசி கும்பல் ஒரு புதிய வரலாற்றை தமிழகத்தில் படைத்துள்ளது. “அம்மாவின் ஆட்சியை அமைப்போம்” என ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கையில் அவரது ஆட்சி எப்படி இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் 20 வருடங்களுக்குப் பிறகு தவிர்க்க முடியாமல் சொத்து குவிப்பு வழக்கில் போட்டுஉடைத்துள்ளது. ஜெயலலிதாதான் சொத்து குவிப்பு வழக்கின் மூளையாக செயல்பட்டுள்ளார். சசி கும்பலை பயன்படுத்தி குற்றங்களிலிருந்தது தப்பித்திக்கொள்ளவே ஜெ முயற்சித்துள்ளார் என அவரது கிரிமினல் -கேடித் தனத்தை  நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவின் தீர்ப்பை தொடர்ந்து அம்பலப்படுத்துயுள்ளது உச்சநீதிமன்றம்.

  • கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஜெயாவுக்கு அரசு மரியாதையில் மெரினாவில் சமாதி இருப்பது சட்டத்திற்கு விரோதமானது. அதை உடனே அகற்ற வேண்டும்!
  • கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஜெ வின் படங்கள் மற்றும் குறிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும்! அதற்கு பதிலாக தமிழகத்தின் பெருமையாக இருக்க கூடிய திருவள்ளுவர் படங்களை ஒட்ட வேண்டும்!
மக்கள்வரிப்பணத்தில் செயல்படுத்தக்கூடிய மக்கள் நலத்திட்டங்களை  , இலவசத்திட்டங்கள் என அறிவித்து தமிழக மக்களை பிச்சைகாரர்களாக கருதிய பார்ப்பன பாசிஸ்ட், ஊரறிந்த கிரிமினல் குற்றவாளி ஜெயாவின் புகைப்படங்களை தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.”
காவல் துறையின் அனுமதி இன்றி நடந்ததால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். 
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி. பேச:9445475157.  

_______________
சீர்காழியில் தோழர்கள் கைது : உச்சநீதிமன்ற உத்தரவை துடைத்துப் போட்ட காகிதமாக மதிக்கும் சீர்காழி காவல்நிலையம்

“குற்றவாளிக்கு அரசு மரியாதையா? ‘மெரினாவில் இருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று!”
என்ற முழக்கம் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டியாக ஒட்டப்பட்டது. அதே முழக்கத்தை அச்சடித்து சுவரொட்டியாக சீர்காழி நகரத்தில் ஒட்டப்பட்டது. மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவியும், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சுப்ரமணியன் அவர்களும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தபோது சிவில் உடையில் இருந்த காவலர்கள் சுவரொட்டியையும், பசை குண்டானையும் பாய்ந்து குதறினார்கள். போலீஸ்தான் என்று தெரிந்தவுடன் போலிசை அம்பலப்படுத்தியும், தமிழகத்தில் நடைபெறும் மாபிஃயா கும்பலின் ஆட்சியையும், ஜெயா சமாதியை அகற்றும் முழக்கங்களை தோழர்கள் போட்டார்கள். 18-02-2017 காலை 08-00 மணிக்கு கைது செய்யப்பட்டு சீர்காழி காவல்நிலையத்தில் U/S 153, 504, IPC R/W  PUBLIC PLACE DISTRUBMENT ACT  ல் கைது செய்யப்பட்டு சீர்காழி நடுவர் மன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, மாலை மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் தோழர் ரவி மீது சீர்காழி மற்றும் புதுப்பட்டினம் காவல் நிலையங்கள் சுவரொட்டி ஒட்டியதற்கு வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் வெளிவந்துள்ளார். சீர்காழி மற்று புதுப்பட்டினம் காவல் நிலையங்கள் ஜனநாயக விரோதமாகவும், பாசிச நடைமுறையோடும் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வினவு

கருத்துகள் இல்லை: