
பின்னர் 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிவன் சிலையை ஜோதி ஏற்றி, திறந்து வைத்த பிரதமர் மோதி, தொடர்ந்து விழாமேடையில் உடுக்கை அடித்தார். இது தொடர்பான புத்தகம் ஒன்றையும் வெளியிட்ட பிறகு பேசிய நரேந்திர மோதி, யோகாவின் சிறப்புகளை விவரித்தார். யோகாவைப் பின்பற்றுவதன் மூலம், மனம், உடல் மற்றும் அறிவு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்படுவதாகவும், இது ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம் என்றும் குறிப்பிட்டார். ஈஷா யோகா மையம் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுவருவதால் இந்த விழாவில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என சூழல் அமைப்புகள் வலியுறுத்திவந்தன. இது தொடர்பாக பல்வேறு அமைப்புக்களின் சார்பில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். bbc.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக