புதன், 8 ஜனவரி, 2014

பாசத்தை காட்டினார் ஒல்லி நடிகர். நொந்து நூலாகியுள்ளாராம்

சிவ நடிகரை தன் உடன் பிறவா தம்பி போல பாசத்தை காட்டினார் ஒல்லி நடிகர். கொலவெறி படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்து, நல்ல சம்பளமும் வழங்கினார். அதன் பிறகு ஏறுமுகமாகி, இன்று கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை தேதி கொடுத்துள்ளாராம் ஒல்லி நடிகர் வளர்த்துவிட்ட சிவ நடிகர். இதற்கிடையே தனது படங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் நொந்து நூலாகியுள்ளாராம் ஒல்லி நடிகர். இந்த நிலையில் தான் அறிமுகம் செய்த நடிகரிடம் தயாரிப்பாளர்கள் படையெடுப்பது வேறு வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியுள்ளது.இதோடு சேர்ந்து ஒல்லி நடிகரை கண்டு கொள்வதும் இல்லையாம். இதனால், அடிக்கடி பேசிவந்த இருவரும் தற்போது போனில் கூட தொடர்பு கொள்வதில்லையாம்.

கருத்துகள் இல்லை: