வெள்ளி, 10 ஜனவரி, 2014

37வது சென்னை புத்தகக் காட்சி, ஜனவரி 10 முதல் 22 வரை

பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. 37வது சென்னை புத்தகக் காட்சி, ஜனவரி 10 முதல் 22 வரை ஒய்.எம்.சி.ஏ நந்தனம் மைதானத்தில் தொடங்க உள்ளது குறித்து.
# வாசலிலிருந்து கண்காட்சி இடம் வரை செல்ல இலவச வாகன வசதி
# கணினி டிக்கெட் வசதி
# மொபைல் எண் கொடுத்தால், தினமும் அந்தந்த நாள் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் தரப்படும்
# புத்தகக் கண்காட்சி அரங்கில் பொதுமக்கள் உட்கார்ந்துகொள்ள இடவசதி
# கண்காட்சி வளாகத்தின் உள்ளேயே ஒரு ஏ.டி.எம் வைக்கப்படும். அதில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்
# ஸ்டால் அலோகேஷன் கணினிமூலம் செய்யப்பட்டது
# சிறுகதைப் போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படும் கதைகளை பபாசியே பதிப்பிக்கும்
# 1500 கார்கள் நிறுத்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள மிலிடரி மைதானத்திலும் கார்களை நிறுத்திக்கொள்ளலாம்.
# நம்ம ஆட்டோவுடன் இணைந்து உள்ளேயே மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ எடுத்துக்கொள்ளலாம்
# கழிப்பறை வசதிகள் அதிகம் செய்யப்பட்டுள்ளன
# கழிப்பறை வசதிக்காகக் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
# உள்ளரங்கில் எழுத்தாளர்-வாசகர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
# ஏழு லட்சம் இலவச டிக்கெட்டுகள் பள்ளி மாணவர்களுக்குத் தரப்பட்டுள்ளது
# சென்னை புத்தகக் காட்சிக்கு ஆப்பிள் ஐ ஓஎஸ், ஆண்டிராய்ட் ஆப் உருவாக்கப்பட்டுள்ளன
# மருத்துவ வசதி உள்ளேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது
# மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர இருக்கை ஏற்பாடு செய்துள்ளார்கள்
# புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு அமைச்சர்கள் வருகிறார்கள்
# புதிய லோகோ அறிமுகம்

# நுழைவுக் கட்டணம் ரூ. 10. பன்னிரண்டு வயதுக்கு உட்பட்டோருக்கு டிக்கெட் கிடையாது
# சென்ற ஆண்டு சுமார் 3.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன
# இம்முறை, சென்ற ஆண்டைவிட 50% அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
# வேலை நாட்களில் 2-9, விடுமுறை நாட்களில் 11-9 நேரம்
# சென்ற ஆண்டு 10 கோடி ரூபாய் விற்பனை நடந்துள்ளது, இந்த ஆண்டு 15 கோடி ரூபாய் விற்பனை ஆகும் என்று எதிர்பார்ப்பு
# 800 அரங்குகள், 400 பங்கேற்பாளர்கள், தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, வட மாநிலங்களிலிருந்து பதிப்பாளர்கள் பங்கேற்பு. இரண்டு லட்சம் சதுர அடி.
# பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, சிறுகதைப்போட்டி.

கருத்துகள் இல்லை: