வியாழன், 9 ஜனவரி, 2014

திமுகவிலேயே அரசியல் தெரிந்த ஒரே ஆள் தற்சமயம் அழகிரி தான்

முடிவு எடுக்க தெரியாமல் முழிக்கும் விஜயகாந்த், சீட்டு பேரமும் பெட்டி பேரமும் இன்னும் படியவில்லையா??? 
அப்படி, இப்படி, என்று பேசியவர்களுக்கெல்லாம் சேர்த்து,. அப்பனுக்கே இவ்வளவு பெரிய ஆப்பா வச்சுட்டானே. உண்மையிலேயே அழகிரி பேக்கு இல்ல, கில்லாடிதான்.அப்போ தேமுதிக, திமுக கூட்டணி காற்றோடு கரைந்து விட்டது.இத்துணை அரசியல்வாதிகள் காலங்காத்தாலே இவ்வளவு ஆக்க ரோசமா அறிக்கை விட்டுள்ளதால் அழகிரி ஆக்சன் எத்தனை பேரை இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்து இருக்கும். சும்மா சொல்ல கூடாது நெத்தி அடி. இப்போ எஞ்சி நிற்பது தேமுதிக விற்கு இரண்டு கட்சி தான் ஒன்னு பிஜேபி அடுத்தது காங்கிரஸ். பிஜேபி கூட கருணாநிதி கூட்டணி கிடையாது என்று தெளிவாகக் கூறிவிட்டார்(சிறுபான்மை ஓட்டை மனதில் வைத்து) ஆக எஞ்சி நிற்பது காங்கிரஸ். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறதாம். ஆகவே கேப்டன் காங்கிரஸ் பக்கம் போனால் வேறு வழியில் கலைஞர் ஆப்பு வைப்பார் ஆகவே இப்பொழுதே பிஜேபி யுடன் தான் கூட்டணி என்று அறிவித்து விட்டு தேர்தல் வேலையை தொடங்க வேண்டியது தான். இல்லை என்றால் தனித்து போட்டி என்று அறிவித்து விட்டு பாமக மாதிரி தேர்தல் வேலையை முடுக்கி விடுங்கள்.திமுகவிலேயே அரசியல் தெரிந்த ஒரே ஆள் தற்சமயம் அழகிரி தான் என்பதை இப்பொழுதாவது ஒத்து கொள்ளத்தான் வேண்டும். ஒரு மூவில் எத்தனை காய்கள் வீழ்ந்து விட்டன. இந்தாளுகிட்டத்தான் திமுக வரும் பாருங்கள். P. Kannan - Bodinayakkanur,இந்தியா
 

கருத்துகள் இல்லை: