வியாழன், 9 ஜனவரி, 2014

ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக நினைக்க வேண்டாம் ! பாஜகவின் நடுக்கம் !


ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக நினைக்க வேண்டாம்; பா.ஜ.,விற்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் எச்சரிக்கை
பாரதீய ஜனதா கட்சி ஆம் ஆத்மியை தீவிர சவாலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
பா.ஜ.,, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என பா.ஜ.,விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும், பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். nakkheeran.in

கருத்துகள் இல்லை: