புதன், 8 ஜனவரி, 2014

விசாரணைக்கு அழைத்து சென்ற சிறுவனின் வாய்க்குள் சுட்ட சென்னை போலீஸ் !

சென்னை: சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிறுவனின் வாயில் சென்னை நீலங்கரை காவல் நிலைய போலீஸார்   துப்பாக்கியை வைத்து சுட்டனர் . அப்போது சிறுவனின் வாயில் குண்டு பாய்ந்தது. பலத்த காயத்துடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கைக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மாகாந்தி நகரில் திங்களன்று கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது. இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் இரவில் 16 வயது சிறுவன் ஒருவனை அழைத்து வந்தனர். அவனிடம் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை நடத்தினார். அப்போது அந்த சிறுவன் தான் திருடவில்லை என கூறினான். இந்த நிலையில் செவ்வாய்கிழமை 4 மணிக்கு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவனின் வாயில் வைத்து திருடினாயா? என  விசாரணைக்கு அழைத்து சென்ற சிறுவனின் வாய்க்குள் சுட்ட சென்னை போலீஸ்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: