புதன், 8 ஜனவரி, 2014

ஹைதராபாத்தில் சோனியா காந்திக்கு கோயில் ! 500 கிலோ வெள்ளியில் சிலை

ஹைதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் அமைக்கவிருப்பதாக அங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். தெலுங்கானா அமைப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது சொந்த செலவில் தெலுங்குத்தாய் போன்று அம்மன் உருவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., டாக்டர் சங்கரராவ் கூறுகையில்: தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை சோனியா நிறைவேற்றியுள்ளதால் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் கோயில்  அமைக்க முடிவு செய்துள்ளேன்.
இந்த கோயில், பெங்களூரூ- ஹைதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள எனது மகளுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும். இதற்கு சோனியா காந்தி சாந்தி வதன் என்று பெயரிடப்படும். தெலுங்கானா மக்கள் இங்கு சென்று நன்றி செலுத்த இந்த கோயில் ஏதுவாக இருக்கும் என்றார். இந்த சிலை 500 கிலோ எடை கொண்ட வெள்ளியால் வடிவமைக்கப்பட்டுள்ளது  dinakaran.com

கருத்துகள் இல்லை: