செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஊர்களில் ஜாதி பெயரை நீக்க அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் பல கிராமங்கள் ஜாதி பெயரில் உள்ளன; இவை அரசு கெஜட்டிலும் இடம் பெற்றுள்ளன. இப்பெயர்கள் சில சமுதாயத்தினரை புண்படுத்துவதாக உள்ளன.

இதனால், ஊர்களின் ஜாதி பெயரை அகற்றி, தமிழ் பெயர் வைக்க, அரசு தீர்மானித்துள்ளது.  இதற்கு, அந்தந்த கிராம அளவில் ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர், பிரமுகர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழுவினர் ஊரின் பெயரை மாற்ற, கிராமத்தினரிடம் கருத்து கேட்பர். பெயர்கள் கலெக்டர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு, அரசு கெஜட்டில் வெளியிடப்படும்.
முதற்கட்டமாக, ஜாதியின் பெயரில் உள்ள ஊர்களின் பட்டியலை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: