அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சமுதாய நிலை
இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழரின் பாதுகாவலரர்களாகத் தங்களைத் தாங்களே நியமனம் செய்துகொண்ட ‘சினிமா சீமான்’ போன்ற ‘பெரிய மனிதர்கள’ தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் சிங்கள பேரினவாதிகளால் அறுக்கப் படுவதாக அலறத் தொடங்கியிருக்கிறாhகள்;. இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள தமிழுணர்வு வாதிகளால், இலங்கைத் தமிழ்ப் பெண்களின் மார்பகங்களைக் காப்பாற்றப் போராட்டஙகள் விரைவில் நடாத்தப்படலாம். சட்டைக்குள்ளிருக்கும் பெண்களின் அங்கங்கள் அரசியல்வாதத்தின் ஆயுதமாக மாறிவிட்டன. எதற்கெடுத்தாலும் தமிழ்ப்பெண்களின் மானம் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னெடுப்பது தமிழ்த்தேசியத்தின் பரம்பரைப்பழக்கம். இதனால் உணர்ச்சிளை ஏற்றிவிட்டு உயிர்களைப் பலியெடுப்பது அடிக்கடி நடக்கும் விடயங்கள்.
இரண்டுமாதத்துக்கு முன் சிங்களப்பகுதியில் நடந்த இருவேலைக்காரப்பெண்களின் மரணமும் அதைத்தொடர்ந்த ‘மர்மவாதி;பற்றிய வதந்திகளும் காட்டுத்தீ போல் பல பகுதிகளிலும் பரவிக்கொண்டிருக்கின்றன. மர்ம மனிதன் விடயம் இலங்கையிலுள்ள மக்களை, இன, மத, பிராந்தியபேதமின்றித் தாக்கியிருக்கிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மதமென்று வித்தியாசம் பார்க்காமல் இந்த மர்ம மனிதன் பெண்களின் மார்பகங்களைக் கீறீக்கிழிப்பதான வதந்தி பல பகுதிகளிலும் அடிபடுகின்றன.
மேலும் வாசிக்க >>>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக