வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

வேத சடங்குகள் பாலியல் வக்கிரங்கள்.தாத்தாச்சாரியார்

அஸ்வமேதம்
வேத சடங்குகள் பாலியல் சடங்குகளா?
ஆம் என்கிறார்கள் சிலர். பாலியல் வக்கிரங்கள் என்றே சொல்கிறார்கள். இவர்கள் எல்லாரும் முக்கியமாக குறிப்பிடுவது அசுவமேத யாகத்தை. அதில் பயன்படுத்தப்படும் சில பகடிகளை இவர்கள் மிக மோசமாக இன்றைக்கு பொதுதளங்களில் ஏதோ இதுதான் வேத சடங்குகளே என்பது போல கூறுகிறார்கள். உதாரணமாக அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்:
ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு.. அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும.; அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி.. குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும.; இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.
புத்தர் காலம் வரை இதுதான் நிலை என்கிறார் தாத்தாச்சாரியார். இதற்கான ஆதாரமாக இவர்கள் காட்டுவது என்ன என்று பார்த்தால், அவை வேத சடங்குகளில் பயன்படுத்தப்படும் தைத்திரீய சம்கிதையின் சில வரிகள். பாலியல் வசை/பகடித்தன்மை கொண்ட பொருள் தரும் சில வரிகள். ஏதோ அசுவமேத யாகத்தின் தன்மை இதே விதத்தில் மட்டுமே இருந்ததாக பொருள்பட தாத்தாச்சாரியார் எழுதுகிறார்

கருத்துகள் இல்லை: