
கடாபியை பிடிப்போருக்கு பென்ஹாசியிலுள்ள வர்த்தர் ஒருவரும் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக கூறியுள்ளதாக லிபிய மாற்றத்திற்கான பேரவையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடாபிக்கும் அமைச்சரை அமைச்சர்களுக்கும் இடையிலான தொடர்புகள் அற்று போயுள்ளதாக லிபிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடாபியின் கட்டுப்பாட்டில் இருந்த 95 வீதமான பகுதிகளை தாம் கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்களின் இராணுவ பேச்சாளர் வெளிநாட்டு செய்தி சேவையொன்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முடக்கப்பட்ட லிபியாவின் சொத்துக்களை விடுவிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையில் இந்த வாரத்திற்குள் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக