வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ஜெயேந்திரர் மறுப்பு!நீதிபதியுடன் சங்கரராமன் கொலை வழக்கில் பேரம் பேசவில்லை




சென்னை: வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அந்த குற்றச்சாட்டை ஜெயேந்திரர் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு பற்றி ஜெயேந்திரர் கூறுகையில் 'நீதிபதியுடன் தான் தொலைபேசியில் நான் பேரம் பேசியதாக வந்த ஆடியோ முற்றிலும் பொய்யானது. வழக்குப் பிறகு நான் தொலைபேசியை பயன்படுத்தில்லை. எனக்கு வேண்டாதவர்கள் சிலர் பணத்துக்காக என் மீது பொய்யாக குற்றச்சாட்டியுள்ளனர்' என்று கூறினார். முன்னதாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் நேற்று தடை விதித்தது. மேலும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு 8 வாரம் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: